Leopard Death : சேலத்தில் சிறுத்தை உயிரிழந்த விவகாரம்.. முன்னாள் பாமக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 3 பேர் கைது!
Salem Leopard Death : சேலத்தில் சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் முன்னாள் பாமக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 3 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து ஆடு, மாடு, கொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி வியாழக்கிழமை சின்னப்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்ட போது சிறுத்தை உயிரிழந்து இருந்ததை பார்த்து வனத்துறையினர் சிறுத்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ததில் சிறுத்தை துப்பாக்கியால் சுடப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்
அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் சேலம் மாவட்டம் முன்னாள் பாமக ஊராட்சி மன்ற தலைவரும் தற்போதைய ஊராட்சி மன்ற தலைவரின் கணவருமான முனுசாமி மற்றும் அதே பகுதியை சேர்ந்த சசி ராஜா ஆகிய மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.