ARR Concert: இசைநிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை பாயுமா? தாம்பரம் காவல் ஆணையர் பேட்டி!
”25 ஆயிரம் பேருக்கு இருக்கைகள் போடப்பட்ட நிலையில் கூட்டம் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை வந்துள்ளனர்”

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் நடைபெற்ற குளறுபடி தொடர்பாக விசாரணை மற்றும் ஆய்வு பணிகளை தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மேற்கொண்டுள்ளர்
பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி சென்னை பனையூரில் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெற இருந்தது. அன்றைய தினம் பெய்த தொடர் மழை காரணமாக மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஒத்திவைப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் ’மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10ஆம் தேதியான நேற்று நடைபெற்றது. ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி இசை நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியையொட்டி பொதுமக்களுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டிருந்தது.