தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Iit Madras: ‘டார்ச்சர் எதிரொலி! சென்னை ஐஐடியில் ஆய்வு மாணவர் தற்கொலை!’ பேராசிரியர் இடைநீக்கம்!

IIT Madras: ‘டார்ச்சர் எதிரொலி! சென்னை ஐஐடியில் ஆய்வு மாணவர் தற்கொலை!’ பேராசிரியர் இடைநீக்கம்!

Kathiravan V HT Tamil
Nov 29, 2023 12:22 PM IST

”IIT Madras: கடந்த மார்ச் மாதம் 31 வயதான பிஹெச்டி ஆய்வு மாணவர் சச்சின் குமார் ஜெயின் என்பவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது மரணத்திற்கு அவரது பிஹெச்டி வழிகாட்டியாக இருந்த பேராசிரியர் ஆஷிஷ் மட்டுமே காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி இருந்தனர”

தற்கொலை செய்து கொண்ட மாணவர் சச்சின் குமாரின் அடையாள அட்டை - பேராசிரியர் ஆஷிஷ் குமார்
தற்கொலை செய்து கொண்ட மாணவர் சச்சின் குமாரின் அடையாள அட்டை - பேராசிரியர் ஆஷிஷ் குமார்

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த மார்ச் மாதம் 31 வயதான பிஹெச்டி ஆய்வு மாணவர் சச்சின் குமார் ஜெயின் என்பவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது மரணத்திற்கு அவரது பிஹெச்டி வழிகாட்டியாக இருந்த பேராசிரியர் ஆஷிஷ் மட்டுமே காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி இருந்தனர்.

இந்த மரணம் தொடர்பாக விசாரிக்க, முன்னாள் காவல்துறை இயக்குநர் திலகவதி ஐபிஎஸ், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் சபிதா, கண்ணகி பாக்கியநாதன், பேராசிரியர் ரவீந்திர கிட்டு, மாணவர் பிரதிநிதி அமல் ஆகியோரை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டது.

இக்குழு ஆய்வு மாணவர் மரணம் தொடர்பாக சக மாணவர்கள், நண்பர்கள், விடுதி காப்பாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் சச்சினின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தியது.

இந்த விசாரணையில் ஐந்து ஆண்டுகளில் முடிக்க வேண்டிய சச்சின் ஜெயினின் ஆய்வு காலத்தை எட்டு ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டதையும், ஆய்வு பணிகளில் இருந்து சச்சின் ஜெயினை தனிமைப்படுத்து பேராசிரியர் ஆஷிஷ் அவமானப்படுத்தியதையும் அக்குழு உறுதிப்படுத்தியது.

இக்குழு சமர்பித்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் மெக்கானிக்கல் என்ஞ்சினியரிங் துறை பேராசிரியராக உள்ள ஆஷிஷ் குமாரை இடைநீக்கம் செய்து சென்னை ஐஐடி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்