Kushboo vs DMK: ’இந்த பூச்சாண்டி எல்லாம் என் கிட்ட வேணாம்! கலைஞர் என் ஆசான்!’ திமுகவுக்கு குஷ்பு எச்சரிக்கை!
“Kushboo vs DMK: பழைய ட்வீட்களை எடுத்து போடுவது எங்கள் டி.என்.ஏ; தற்போதைய பிரச்னைகள் குறித்து பேச திமுகவிடம் எதுவும் இல்லை. திமுக பற்றி எனக்கு நல்லா தெரியும். அந்த தைரியம் உங்கள் தலைவனுக்கும் இல்ல; வேறு யாருக்கும் இல்ல”

தனது பழைய ட்வீட்களை சுட்டிக்காட்டி திமுகவினர் விமர்சித்து வருவது குறித்து நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.
பாஜக சார்பில் நடந்த ஆர்ப்பட்டம்!
தமிழ்நாட்டில் போதை பொருட்களை ஒழிக்க கோரி பாஜக சார்பில் மார்ச் 11ஆம் தேதி அன்று செங்குன்றம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் பிச்சை போடுவதால் அவர்கள் வாக்குகளை பெற்று விடலாம் என திமுக நினைக்கிறது என கூறி இருந்தார்.
அசால்டா பிச்சைன்னு சொல்றீங்க!
நடிகை குஷ்புவின் இந்த பேச்சுக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதில், அந்த அளவுக்கு வாழ்வாதாரத்துக்கு உதவக்கூடிய உரிமைத்தொகையை நீங்கள் அசால்டா “பிச்சை போடுகிறார்” என்ற வார்த்தையைச் சொல்கிறீர்கள். பிச்சை என்பதன் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? நீங்கள் உங்கள் போக்குக்கு வார்த்தைகளை இப்படி எல்லாம் பயன்படுத்தாதீர்கள். நிச்சயமாக இதற்கு எங்களுடைய தமிழ்நாட்டு பெண்கள் ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களும் உங்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள். அவர்கள் உங்களைப் பார்த்துக் கொள்வார்கள். அடக்கி வாசியுங்கள் என்பதை மட்டும் நான் கூறிக் கொள்கிறேன் என கீதா ஜீவன் கூறி இருந்தார்.