தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Madurai: Look At The Work Of A Soldier!

Madurai: ராணுவ வீரர் செஞ்ச வேலைய பாருங்க !

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 01, 2023 08:32 PM IST

மனைவியின் மண்டையை உடைத்த ராணுவ வீரர் கைது

கோப்புபடம்
கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடியை சேர்ந்தவர் அய்யனார் அவரது வயது 40. மனைவி சுகன்யா அவருக்கு வயது 35. இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இந்நிலையில் அய்யனார் மற்றும் சுகன்யா இருவரும் அவ்வப்போது சண்டியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில்தான் கடந்த நான்கு ஆண்டுகளாக குடும்ப பிரச்னையில் அய்யனார் தனது மனைவியை பிரிந்து வாழ்த்து வருகிறார். தற்போது இவர் சிக்கீம் மாநிலத்தில் உள்ள ராணுவ படையில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் தான் கடந்த 20ம் தேதி விடுமுறையில் அய்யனார் ஊருக்கு வந்துள்ளார். நேற்று மனைவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த அய்யனார் மனைவி சுகன்யாவை தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அவரது மண்டை உடைந்தது. இதையடுத்து காயம் அடைந்த சுகன்யா திருமங்கலம் அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து ராணுவவீரர் அய்யனாரை கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்