12th Revaluation: மாணவர்களே மதிப்பெண்ணில் சந்தேகமா? மறு கூட்டல், மறு மதிப்பீடுக்கு இன்று முதல் விண்ணப்பக்கலாம்!
மாணவர்களுக்கு தங்களின் மதிப்பெண்களில் சந்தேகம் இருந்தால் அவற்றை மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய வழிகள் உள்ளது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவா்கள் விடைத்தாள் நகலை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வெளியான நிலையில் மாணவ, மாணவிகள் கலை, அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் உள்ளிட்ட கல்லூரிகளில் சேர்வதில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். மறுபுறம் தேர்வில் தோற்றவர்களுக்கு உடனடி சிறப்பு தேர்வுகளுக்கான வேலைகள் மற்றும் பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.
மாணவர்களுக்கு தங்களின் மதிப்பெண்களில் சந்தேகம் இருந்தால் அவற்றை மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய வழிகள் உள்ளது. அதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் . அதுகுறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
