தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Cylinder Explosion Accident Near Oragadam Death Toll Rises To 3

Cylinder Explosion : சிலிண்டர் வெடித்து விபத்து - பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

Divya Sekar HT Tamil
Sep 30, 2022 02:16 PM IST

ஒரகடம் அருகே சிலிண்டர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

சிலிண்டர் வெடித்து விபத்து
சிலிண்டர் வெடித்து விபத்து

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த விபத்தில் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் (51), அவரது மகள்கள் சந்தியா (21), பூஜா, நிவேதா, பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஆமோத்குமார் (25), குணால், சக்திவேல், அருண், கோகுல், தமிழரசன் உள்பட 12 பேர் உடல் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

அவர்கள் அனைவரும் செங்கல்பட்டு மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஆமோத்குமார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சந்தியா ஆகிய 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதற்கிடையே செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கியாஸ் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் இன்று காலை இறந்தார். இதனால் கியாஸ் குடோன் தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து உள்ளது. 

மேலும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 5 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் உள்ளனர். கியாஸ் குடோன் தீ விபத்தில் பலியான கியாஸ் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், ஊராட்சி தலைவர் அஜய் உள்பட 5 பேர் மீது ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்