Rain Alert: ‘புயல் கடந்தாலும் மழை தொடரும்! திருவள்ளூர் முதல் குமரி வரை 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
”Chennai Rains: மிக்ஜாம் புயலானது ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கரையை கடந்து வருகிறது”

இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
'மிக்ஜாம்’ புயல் சென்னையை விட்டு விலகி சென்ற நிலையில் இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவாகி உள்ள மிக்ஜாங் புயலானது நெல்லூருக்கு வடகிழக்கே 30 கிலோ மீட்டர் தொலைவிலும், பாபட்லாவுக்கு தெற்கு தென் மேற்கில் 130 கி.மீ தொலைவிலும், மசூலிபட்டினத்தில் இருந்து தெற்கு தென் மேற்கில் 190 கிமீ தொலைவிலும் நகர்ந்து கொண்டு இருக்கிறது.
நேற்றைய தினத்தில் சென்னையில் இருந்து சுமார் 100 கி.மீ வரை அருகில் இருந்த மிக்ஜாங் புயல் தற்போது சென்னையில் இருந்து வடக்கே 190 கிலோ மீட்டர் தூரத்திற்கு விலகி சென்றதால் சென்னை மாநகரில் இரவு மழை குறைந்து வெள்ளநீர் வடியத் தொடங்கி உள்ளது.