தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Tushar Deshpande: ருதுராஜ்க்கு அடுத்தபடியாக திருமண பந்தத்தில் இணைந்த சிஎஸ்கே வீரர் தேஷ்பாண்டே - வெளியான புகைப்படங்கள்

Tushar Deshpande: ருதுராஜ்க்கு அடுத்தபடியாக திருமண பந்தத்தில் இணைந்த சிஎஸ்கே வீரர் தேஷ்பாண்டே - வெளியான புகைப்படங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 13, 2023 12:22 PM IST

கிரிக்கெட் வீரர்களின் திருமணம் மாதம் என்று சொல்லும் அளவுக்கு இந்த மாதத்தில் மூன்றாவது கிரிக்கெட் வீரராக திருமண பந்தத்தில் இணைந்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்டார் பவுலர் துஷார் தேஷ்பாண்டே. ருதுராஜ்க்கு அடுத்தபடியாக இரண்டாவது சிஎஸ்கே வீரருக்கு இந்த மாதத்தில் திருமணம் ஆகியுள்ளது.

திருமண நிகழ்வில் துஷார் தேஷ்பாண்டே, அவரது மனைவி நாபா கட்டம்வார்
திருமண நிகழ்வில் துஷார் தேஷ்பாண்டே, அவரது மனைவி நாபா கட்டம்வார்

ட்ரெண்டிங் செய்திகள்

தனது காதலியும், மகளிர் கிரிக்கெட் வீராங்கனையுமான உத்கர்ஷா பவார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ருதுராஜ் கெய்க்வாட். தமிழ்நாடு பாரம்பரிய ஆடையான வேஷ்டி சட்டை அணிந்து ருதுராஜின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், அதுதொடர்பான புகைப்படங்களை பகிர்ந்த அவர் சென்னை மக்களுக்காக அர்பணிப்பதாக தெரிவித்துள்ளார்.

 

இவரை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, நீண்ட நாள் காதலியான ரச்சனா கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஜூன் 8ஆம் தேதி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த இரண்டு ஐபிஎல் இளம் வீரர்களை தொடர்ந்து தற்போது சிஎஸ்கே அணியின் நட்சத்திர பவுலரான துஷார் தேஷ்பாண்டேவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தனது பள்ளி தோழி நாபா கட்டம்வார் என்பவரை கரம் பிடித்து இல்லற வாழ்க்கையில் நுழைந்துள்ளார். இவர்களது திருமணம் மும்பையில் ஜூன் 12ஆம் தேதி நடைபெற்றுள்ளது.

திருமண நிகழ்வின் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்த தேஷ்பாண்டே, "எனது பள்ளி கால க்ரஷாக இருந்தவர் வருங்கால மனைவியாக புரொமோட் ஆகியுள்ளார்" என குறிப்பிட்டிருந்தார்.

தேஷ்பாண்டாவுக்கு, சிஎஸ்கே மற்றும் மும்பை அணியின் சக வீரரான ருதுராஜ் கெய்க்வாட் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதேபோல் சூர்யகுமார் யாதவ், சிமிர்ஜித் சிங் உள்பட பல வீரர்களும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். ருதுராஜ் திருமணத்தை தொடர்ந்து, தேஷ்பாண்டே திருமண நிகழ்விலும் சிஎஸ்கே சிக்ஸர் மன்னனான ஷிவம் துபே கலந்து கொண்டுள்ளார்.

28 வயதாகும் துஷார் தேஷ்பாண்டே ஐபிஎல் 2022 சீசனில் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணியினரால் வாங்கப்பட்டார். அந்த சீசனில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

இதைத்தொடர்ந்து நடந்து முடிந்த ஐபிஎல் 2023 சீசனில் சிஎஸ்கே அணியின் முக்கிய பவுலராக ஜொலித்த தேஷ்பாண்டே அனைத்து போட்டிகளிலும் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் சிஎஸ்கே அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக இருந்துள்ளார்.

இந்த சீசன் அவருக்கு சிறப்பாக அமைந்த நிலையில், தற்போது தனது வாழ்க்கையில் அடுத்த கட்டமாக திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். இவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்