PBKS: ஷார்ட் அதிரடியால் ஸ்கோரை உயர்த்திய பஞ்சாப்.. குஜராத்துக்கு 154 டார்கெட்
Gujrat Titans: 120 பந்துகளில் 154 ரன்களை எடுத்தால் குஜராத் அணி வெற்றி பெறும்.

பஞ்சாப் அணியின் மாத்யூ ஷார்ட் (PTI)
தவன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மொஹாலியில் இன்று மோதுகின்றன.
டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா, பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பஞ்சாப் அணி விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்களை எடுத்தது.
ஓபனர்களாக பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவன் களம் புகுந்தனர். ஷமி வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே பிரப்சிம்ரன் சிங் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அந்த கேட்ச்சை ரஷித் கான் பிடித்தார்.