Kavya Maran: விவாதப் பொருளாகிய காவ்யா மாறன் அணிந்திருந்த கூலிங் கிளாஸ்!
IPL 2023: காவ்யா மாறன் அணிந்திருந்த கூலிங் கிளாஸும் சமூக வலைத்தளத்தில் விவாதப் பொருள் ஆனது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் இணை உரிமையாளர் காவ்யா மாறன். இவர் சன் நெட்வொர்க் உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள்.
ட்ரெண்டிங் செய்திகள்
பல ஆண்டுகளாக இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2023) 'mystery girl' என்ற பெயரை இவர் பெற்றுள்ளார். வழக்கம்போல் இந்த ஐபிஎல் சீசனிலும் இவரது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட்டின் தீவிர ரசிகையான காவ்யா மாறன், ஐதராபாத் அணியை எப்போதும் ஆதரிப்பார். இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் இன்று விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை ஊக்குவிக்க அவர் மைதானத்தில் இருந்தார்.
ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது முதல் ஆட்டத்தை விளையாடியது புவனேஸ்வர் குமார் தலைமையிலான ஐதராபாத் அணி.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்து 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.
இந்த ஆட்டத்தை அவர் கண்டு ரசித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் கண்களில் அணிந்திருந்த கூலிங் கிளாஸும் சமூக வலைத்தளத்தில் விவாதப் பொருள் ஆனது.
அந்த கூலிங் கிளாஸ் Alexander McQueen பிராண்ட் தானா என்று சமூக வலைத்தள வாசி ஒருவர் கேள்வி எழுப்ப, ஆமாம் என்ற மற்றொரு நபர் பதிலளித்தார். அதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 45ஆயிரம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
அவர் கூலிங் கிளாஸுடன் இறுக்கமான முகத்துடன் புன்னகையில்லாமல் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
தொடக்கம் முதலே தடுமாறிய ஐதராபாத் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. முதல் ஓவரிலேயே அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி ஆகியோர் ரன்களின்றி டக் அவுட்டாகி வெளியேறினர்.
மயங்க் அகர்வால் மட்டும் நிதானமாக விளையாடிய 27 ரன்கள் எடுத்தார். ஆனால் அவரும் ஆட்டமிழந்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹாரி புரூக் 13 ரன்களில் ஆட்டமிழக்க வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னில் நடையைக் கட்டினார். அப்துல் சமத் மட்டும் கடைசி சில ஓவர்களில் அதிரடியாக விளையாடினார்.
இருப்பினும், அந்த அணியால் இலக்கை எட்டிப் பிடிக்க முடியவில்லை.
முன்னதாக, எஸ்ஏ20 கிரிக்கெட் போட்டியில் தனது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்ஸ் அணியை சப்போர்ட் செய்ய தென் ஆப்பிரிக்கா சென்றிருந்தார் காவ்யா மாறன். அப்போது தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர் இவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.
அவர் 'நீங்கள் என்னை திருமணம் செய்துகொள்வீர்களா' என எழுதிய பதாகையை வைத்திருந்தார்.
டாபிக்ஸ்