கேப்டனாக மீண்டும் தோனி! எழுச்சி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் 46-வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை இன்று எதிர்கொள்கிறது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 15 வது சீசன் தொடங்குவதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கவனிப்பார் என அறிவிக்கப்பட்டது. ரசிகர்களுக்கு முதலில் இது ஒரு அதிர்ச்சியான முடிவாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் சரியான முடிவை தான் தல தோனி எடுத்திருக்கிறார் என்று பேசத் தொடங்கினர். ஆனால், நடப்பு சீசனில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது.
புதிய கேப்டன் ஜடேஜா தலைமையில் சென்னை அணி விளையாடிய 8 போட்டிகளில் 6-ல் தோல்வியை தழுவியது. அனுபவ வீரரான தோனி, களத்தில் ஜடேஜாவுக்கு பல ஆலோசனைகளை வழங்கினாலும், அந்த அணி ஐபிஎல் வரலாற்றில் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்ததை கண்டு ரசிகர்கள் வேதனனையடைந்தனர்.
மேலும் கேப்டனான ஜடேஜாவும், பேட்டிங், பெளலிங், பீல்டிங் என மூன்றிலும் கோட்டைவிட்டார். இதனையடுத்து, தனது ஆட்டத்தின் மீது கவனம் செலுத்துவதற்கு ஏதுவாக தான் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும், கேப்டன் பொறுப்பை தோனி வசமே கொடுத்துவிடுங்கள் என்று சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் ஜடேஜா கூறியுள்ளார்.