NEET: ’நீட் தேர்வில் குளறுபடி நடந்தது! ஆனால் வினாத்தாள் கசியவில்லை!’ கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி
மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் நீதி வழங்குவதில் இந்திய அரசும், தேசிய ஜனநாயக கூட்டணியும் உறுதிபூண்டுள்ளது. 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு ஏதும் நடக்கவில்லை. இதுவரை இதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என தர்மேந்திர பிரதான் கூறி உள்ளார்

நீட் நுழைவுத்தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்படவில்லை என்றும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பதில் தர அரசு தயாராக உள்ளதாகவும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி உள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரியும் கலந்து கொண்டார்.
கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி
இரண்டாவது முறையாக மத்திய கல்வி அமைச்சராக தனது அலுவலகத்தில் தர்மேந்திர பிரதான் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வில் 24 லட்சம் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
"மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் நீதி வழங்குவதில் இந்திய அரசும், தேசிய ஜனநாயக கூட்டணியும் உறுதிபூண்டுள்ளது. 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு ஏதும் நடக்கவில்லை. இதுவரை இதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.