Crypto Crime: டெலிகிராம் உஷார்… கிரிப்டோ முதலீட்டில் ரூ.14 லட்சத்தை இழந்த நபர்!
அந்த நபரும் அதை நம்பி, சிறிய தொகையை முதலில் முதலீடு செய்துள்ளார். ஆரம்பத்தில் நல்ல வருமானத்தைப் முதலீடு மூலம் பெற்றுள்ளார். இதனால் பேராசை கொண்ட அந்த நபர் ரூ.13.86 லட்சத்தை அந்த பெண் சொல்ல கிரிப்டோவில் முதலீடு செய்துள்ளார்.
கிரிப்டோ கரென்ஸி கோப்புபடம் (REUTERS)
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயது நபர் ஒருவர் ஆன்லைன் மோசடியில் கிட்டத்தட்ட 14 லட்சம் ரூபாயை இழந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் இன்று உறுதிபடுத்தியுள்ளார்.
டெலிகிராம் செயலி மூலம், கிரிப்டோ முதலீடு செய்யுமாறு பலரும் ஆசை காட்டி வருகின்றனர். எங்கிருந்து பேசுகிறார்கள், எந்த எண்ணில் இருந்து பேசுகிறார்கள் என்பது அவர்கள் தொடர்பு கொள்ளும் எண்ணில் தெரியாது.
ஆனால், நமக்கு பரிட்சையமான பெயரில் நம்மை அவர்கள் தொடர்பு கொள்வார்கள். உதாரணத்திற்கு, முதலில் வெளிநாட்டு நபர் போல நம்மை தொடர்பு கொள்வார்கள்.