Indian Youth Killed: அமெரிக்காவில் சுடப்பட்ட இந்திய மாணவர்- ஏன் தெரியுமா?
அமெரிக்காவில் மருத்துவ படிப்பு படித்து வந்த தெலுங்கானா இளைஞர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிர் இழந்தார்.
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அகில்ஷாய் என்ற 25 வயது இளைஞர் அமெரிக்கா மண்டோகா மெரியில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்
அமெரிக்க பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வைத்திருந்த துப்பாக்கி திடீரென தவறுதலாக வெடித்துள்ளது. அப்போது அதிலிருந்து பாய்ந்த குண்டு அகில் சாயின் தலையில் பாய்ந்து உள்ளது. இதில் அகில் சாய் பலத்த காயமடைந்துள்ளார்.
காயமடைந்த கிளை சிகிச்சைக்காக அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அகில் இறந்து விட்டார். இந்த செய்தியைக் கேட்டு தெலங்கானாவில் வாழ்ந்து வரும் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சடைந்துள்ளனர்.
கண்ணீர் விட்டுக் கதறி அழுத அவரது பெற்றோர்கள் தனது மகனின் உடலைச் சொந்த ஊருக்கு எடுத்து வர ஒன்றிய அரசுக்கும் தெலுங்கானா அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தற்போது துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிர் இழந்த அக்கில் சாயின் உடலை இந்தியாவிற்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை அரசு அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
டாபிக்ஸ்