செக்ஸை விளையாட்டாக அங்கீகரித்தது ஸ்வீடன் அரசு! விரைவில் செக்ஸ் சாம்பியன் ஷிப் போட்டிகளை நடத்த திட்டம்
European Sex Championship: வாய்வழி உடலுறவு, ஊடுருவல், தோற்றம், உடல் மசாஜ்கள், சிற்றின்ப மண்டலங்களில் ஆராய்தல், உச்சமடைய வைத்தல் உள்ளிட்ட 16 பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் பலநாடுகளில் இன்னும் செக்ஸ் குறித்து பேச வெளிப்படையாக அனும்கதிக்காத நிலை உள்ள நிலையில், உடலுறவு கொள்வதை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து வருன் ஜுன் 8ஆம் தேதி முதல் செக்ஸ் சாம்பியன் ஷிப் போட்டிகளை நடத்த உள்ளதாக ஸ்வீடன் அரசு அறிவித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த செக்ஸ் சாம்பியன் ஷிப் போட்டி தினமும் 6 மணி நேரம் வரை நடைபெறும் எனவும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை விளையாட வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த காமசூத்ரா குறித்த புரிதல் உள்ள 20 பேர் தற்போது செக்ஸ் சாம்பியன் ஷிப் போட்டிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், மூன்று நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களின் ஆதரவு மூலம் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவாரக்ள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 30 சதவீதம் நடுவர்களின் முடிவுகளும் 70 சதவீதம் பார்வையாளர்களின் முட்
மயக்கம் அடைய வைத்தல், வாய்வழி உடலுறவு, ஊடுருவல், தோற்றம், உடல் மசாஜ்கள், சிற்றின்ப மண்டலங்களில் ஆராய்தல், உச்சமடைய வைத்தல் உள்ளிட்ட 16 பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செக்ஸ் சாம்பியன் ஷிப் போட்டிகள் பன்முகத்தன்மையை ஆதரிப்பதகாவும் இதில் பங்கேற்க பாலின கட்டுப்பாடுகள் ஏதுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் இந்த செக்ஸ் சாம்பியன் ஷிப் போட்டிகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது இந்த நிகழ்ச்சி அமைப்பாளர்களின் நம்பிக்கையாக உள்ளது.
”மற்ற விளையாட்டுக்களை போலவே உடலுறவிலும் விரும்பிய உச்சங்களை அடைவதற்கு பயிற்சி தேவைப்படுகிறது. எனவே இந்த களத்திலும் மக்கள் போட்டிபோடுவது தர்க்கரீதியிலான ஒன்று” என ஸ்வீடிஸ் செக்ஸ் கூட்டமைப்பின் தலைவர் டிராகன் பிராடிச் ச்தெரிவித்துள்ளார். மேலும் உடலுறவு கொள்வதை ஒரு விளையாட்டாக அங்கீகரிப்பதை தவிர்க்க முடியாத ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டாபிக்ஸ்