தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Salem Textile Merchant Hanged Himself With His Wife In Tirupati

Debt Problem: சேலம் தம்பதிக்குத் திருப்பதியில் நடந்த சோகம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 18, 2023 01:21 PM IST

சேலத்தைச் சேர்ந்த தம்பதி திருப்பதியில் தூக்கிட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தம்பதிக்கு நிகழ்ந்த சோகம்
தம்பதிக்கு நிகழ்ந்த சோகம்

ட்ரெண்டிங் செய்திகள்

ஜவுளி வியாபாரி பாலாஜியிடம் கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பித் தருமாறு அடிக்கடி கேட்டுள்ளார். இதனால் நெருக்கடிக்குள்ளான பாலாஜி விரக்தி அடைந்து தன் மனைவியுடன் பிப்ரவரி 15ஆம் தேதி திருப்பதிக்குச் சென்றுள்ளார்.

திருப்பதியில் பெத்தகாப்பு லே-அவுட் பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்துத் தங்கி உள்ளார். இரண்டு நாட்கள் கடந்தும் பாலாஜியும் அவரது மனைவியும் அறையிலிருந்து வெளியே வராத காரணத்தினால் லாட்ஜ் ஊழியர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

பின்னர் ஜன்னல் கதவைத் திறந்து அவர்கள் தங்கி இருந்த அறையில் உள்ளே பார்த்தபோது பாலாஜியும் அவரது மனைவி நிர்மலாவும் தூக்கிட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்து லார்ஜ் ஊழியர்கள் திருப்பதி கிழக்கு காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

தற்கொலை தீர்வல்ல
தற்கொலை தீர்வல்ல

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக எஸ்.வி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் பாலாஜி தங்கி இருந்த அறையிலிருந்து மீட்கப்பட்ட செல்போன், ரயில் டிக்கெட்டுகள் கொண்டு அவரது உறவினர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்