Karunanidhi birth anniversary: கருணாநிதி குறித்து மனம் திறந்து பிரதமர் நரேந்திர மோடி சொன்ன வார்த்தை!
Karunanidhi birth anniversary, PM Modi: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 101 வது பிறந்த நாள் இன்று அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியுடனான நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ் மக்களுக்காகவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் அவர் பாடுபட்டார் என்று பிரதமர் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கருணாநிதிக்கு பிரதமர் மோடி புகழாரம்
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கலைஞர் கருணாநிதி அவர்களின் நூறாவது பிறந்தநாளில் நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தனது நீண்ட காலப் பொது வாழ்க்கையில் தமிழ் மக்களுக்காகவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் அவர் பாடுபட்டார். தனது அறிவார்ந்த இயல்புக்காகவும் அவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். தத்தமது மாநிலங்களில் நாங்கள் இருவரும் முதல்வர்களாக இருந்தது உள்ளிட்ட, பல்வேறு சந்தர்ப்பங்களில் அவருடனான என்னுடைய பரிமாற்றங்களை நான் வாஞ்சையோடு நினைவுகூர்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.