Nitin Gadkari: புரட்சி ஏற்படுகிறது..! பெட்ரோல், டீசல் இல்லாத நிலை சாத்தியமற்றது கிடையாது - நிதின் கட்காரி பேச்சு
2004 முதல் மாற்று எரிபொருளை நோக்கிய அழுத்தங்கள் அளிக்கப்பட்டு வருகிறது எனவும், இன்னும் 5 முதல் 7 ஆண்டுகளில் நூறு சதவீதம் அவை சாத்தியமாகும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

மத்திய சாலைபோக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்காரி
இந்தியாவில் பெட்ரோல், டீசல் கார்களை முற்றிலுமாக ஒழித்து, நாட்டை பசுமைப் பொருளாதாரமாக மாற்றுவதே தனது நோக்கம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.
பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை முற்றிலுமாக ஒழிப்பது இந்தியாவால் சாத்தியமா என்று கேட்டபோது, பிரபல செய்தி நிறுவனம் பிடிஐக்கு அவர் அளித்த பதிலில் கூறியதாவது, “நூறு சதவீதம் சாத்தியமானது தான். இது கடினமான விஷயம் தான் என்றாலும் சாத்தியமற்றது கிடையாது. இதுதான் எனது பார்வை.
எரிபொருள் இறக்குமதிக்காக மட்டும் ரூ. 16 லட்சம் கோடி செலவாகிறது. இந்த பணத்தை விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த பயன்படுத்தலாம். கிராமங்கள் செழிப்பாக இருக்கும். இளைஞர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள் உருவாகும்" என்றார்.
