Moscow terror attack: ஐயோ! பயங்கரவாதிகள் தாக்குதலில் ரஷ்யாவில் 60 அப்பாவிகள் பலி! இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பு பொறுப்பேற்பு!
”ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்”

மார்ச் 22, 2024 வெள்ளிக்கிழமை, ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள க்ரோகஸ் சிட்டி ஹாலில் எரியும் கட்டிடத்தின் அருகே காத்திருக்கும் ஆம்புலன்ஸில் பாதிக்கப்பட்டவரின் உடலை மருத்துவர்கள் கொண்டு செல்கின்றனர். (AP)
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் துப்பாக்கி ஏந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் 60 பேர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யாவில் நடைபெற்ற தேர்தலில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் வெற்றி பெற்ற சில நாட்களுக்கு பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் கச்சேரி அரங்குக்கும் தீ வைத்தனர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.