school principal stops bus: மாணவர்களுக்காகப் பேருந்தை நிறுத்திய தலைமையாசிரியர்!
கேரளாவில் தனியார்ப் பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களுக்காகத் தனியார் பேருந்தை நடுரோட்டில் நின்று நிறுத்தி அந்த பேருந்தில் அவர்களை அனுப்பி வைத்தார்.
கேரளாவில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அரசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள மூன்று மூன்று மாதம் கட்டணம் செலுத்தி பஸ் பாஸ் கொடுக்கப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
அதேபோல் தனியார் பேருந்தில் மாணவர்களின் அடையாள அட்டை மற்றும் பள்ளி சீருடை உடன் இருந்தால் சாதாரண பயண கட்டணத்தில் பாதிக்கும் மேலாகக் குறைக்கப்பட்டு பயணச் சீட்டுக் கொடுக்கப்படுகிறது. இது வழக்கமாக இருந்து வருகிறது.
பெரும்பாலான தனியார் பேருந்துகள் கலெக்ஷன் காரணமாகப் பள்ளி மாணவர்களை அதிகமாக ஏற்றுவது கிடையாது. இந்நிலையில் மலப்புரம் மாவட்டத்தில் பாலக்காடு பகுதியில் பாலக்காடு - கோழிக்கோடு நெடுஞ்சாலையில் தனியார்ப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இவ்வழியாக செல்லும் பெரும்பாலான தனியார் பேருந்துகள் இப்பள்ளி நிறுத்தத்தில் நிறுத்துவதில்லை.
இதன் காரணமாகத் தினமும் ஏராளமான மாணவர்கள் பேருந்துக்காகக் காத்து நிற்கின்றனர். குறிப்பாக இந்த பள்ளியின் பேருந்து நிறுத்தத்தில் தனியார் பேருந்துகள் நிறுத்துவதே இல்லை. இது குறித்து பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் அரசு அலுவலர்களுக்குப் பலமுறை புகார் கொடுத்தும் எந்த பதிலும் இல்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர், திடீரென பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, காத்திருந்து தனியார் பேருந்தை நிறுத்தி நடத்துநரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பின்னர் காத்திருந்த மாணவர்களை அந்த பேருந்தில் அனுப்பி வைத்துள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது. தனியாகப் போராடிய தலைமை ஆசிரியரின் இச்செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.