HT Elections Story: ’நாடாளுமன்றத் தேர்தல் 1952’ முதல் பிரதமர் ஆன நேரு! 3 இடங்களை வென்ற பாஜக!
”Parliamentary Elections 1952: இன்றைய ஆளும் பாஜகவின் தாய் அமைப்பான ஷியாம பிரசாத் முகர்ஜியால் தோற்றுவிக்கப்பட்ட பாரதீய ஜனசங்கம் 3 இடங்களில் வென்று இருந்தது”

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வரும் நடைபெற உள்ள 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் மேகங்கள் தென்படத் தொடங்கிவிட்ட நிலையில் நாடு விடுதலை அடைந்தது முதல் கடந்த 2019ஆம் ஆண்டு ஆண்டு வரையிலான நாடாளுமன்றத் தேர்தல் களத்தை HT Elections Story தொடர் மூலம் உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறோம்.
நாடு விடுதலை அடைந்த பிறகு 1950 ஜனவரி 26ஆம் ஆண்டு இந்தியா தன்னை குடியரசு நாடாக அறிவித்துக் கொண்டது. முதல் முறையாக சாதி, மதம், இனம், மொழி, பாலினம், சமூக, உள்ளிட்ட எந்த வித பேதமும் இன்றி 21 வயது நிரம்பிய இந்தியர்கள் அனைவருக்கும் வாக்குரிமையை இந்தியக் குடியரசு வழங்கியது.
1952ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி முதல் ஜனவரி 25 ஆம் தேதி வரை 17 நாட்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் மக்களவைத் தேர்தலில் மொத்தமிருந்த 401 தொகுதிகளில் இருந்து 489 உறுப்பினர்கள் தேர்வானார்கள். அப்போது இரட்டை தொகுதி முறை நடைமுறையில் இருந்ததால் 314 தொகுதிகளில் இருந்து தலா ஒரு எம்.பியும், 86 ட்க்ஹொகுதிகளில் இருந்து தலா இரண்டு எம்.பிக்களும், மேற்கு வங்கத்தில் ஒரு தொகுதியில் இருந்து மூன்று எம்.பிக்களும் தேர்வாகினர்.