Katchatheevu row: சூடு பிடிக்கும் கச்சத்தீவு விவகாரம்..காரசாரமாக விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!
கச்சத்தீவு தீவு விவகாரத்தில் திமுகவை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்த சிறிது நேரத்திலேயே ஜெய்சங்கரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Katchatheevu Island issue: கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் செய்சங்கர் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "கச்சத்தீவு விவகாரம் திடீரென எழுந்து வரவில்லை; இது நாடாளுமன்றத்தில் அடிக்கடி விவாதிக்கப்படும் நேரடி பிரச்னை... கடந்த 5 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது.
இவ் விவகாரத்தில் காங்கிரசும், திமுகவும் தங்களுக்கு எந்த பொறும்பும் இல்லை என்ற அணுகுமுறையை கடைபிடித்தனர்." என்றும் ஜெய்சங்கர் கூறினார்.
ஜெய்சங்கர் மேலும் கூறுகையில், கச்சத்தீவு விவகாரம் என்பது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் அடிக்கடி கடிதப் போக்குவரத்தின் விஷயமாக இருந்தது. இவ்விவகாரம் தொடர்பாக தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன். கச்சத்தீவு பிரச்னை எப்படி உருவானது என்பது பற்றி மக்களுக்கு தெரிய வேண்டும்.