Indigo: பீகார் செல்ல வந்த பயணியை ராஜஸ்தானில் இறங்கி விட்ட இண்டிகோ விமானம்
பொள்ளாச்சி போயி புளியம்பட்டி என்ற நகைச்சுவை பாணியில் பீகார் செல்ல வந்த நபரை உதய்பூரில் இறக்கி விட்டு மீண்டும் பாட்னாவிற்கு அழைத்து சென்றுள்ளது இண்டிகோ விமானம்!
தில்லியில் இருந்து இண்கோ விமானத்தில் பாட்னா செல்ல புறப்பட்ட நபர் ராஜஸ்தானின் உதய்பூர் விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
பீகார் தலைநகர் பாட்னாவிற்கு செல்ல அப்சர் ஹூசைன் என்பவர் இண்டிகோ விமான நிறுவனத்தில் டிக்கெட் புக் செய்திருந்தார். இந்நிலையில் தில்லி விமான நிலையத்திற்கு வந்த அப்சர் ஹூசைன் உதய்பூர் செல்லும் விமானத்தில் தவறுதலாக ஏறி உள்ளார். விமான நிலையத்தில் வழக்கமான பல கட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. பின்னர் அவர் பயணம் மேற்கொண்டார். அவர் உதய்பூரில் இறங்கிய போது தான் தவறுதலாக பாட்னாவிற்கு பதிலாக ராஜஸ்தான் வந்தது தெரிய வந்தது. பின்னர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட அப்சர் ஹூசைன் இண்டிகோ விமான நிறுவனம் மூலம் மாற்று விமானத்தில் மீண்டும் பாட்னாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடம் அறிக்கை பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என விமான இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கடந்த 20 நாட்களில் 2வது முறையாக இதுபோன்ற சம்பவம் இண்டிகோ விமான நிலையத்தில் அறங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பொள்ளாச்சி போயி புளியம்பட்டி என்ற நகைச்சுவை பாணியில் பீகார் செல்ல வந்த நபரை உதய்பூரில் இறக்கி விட்டு மீண்டும் பாட்னாவிற்கு இண்டிகோ விமானம் அழைத்து வந்துள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்