தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  India Vs Pda: ம.பி தேர்தல்.. தொகுதி பங்கீட்டில் உரசல்: இந்தியா கூட்டணியை குறிப்பிடாத அகிலேஷ் யாதவ்!

India Vs PDA: ம.பி தேர்தல்.. தொகுதி பங்கீட்டில் உரசல்: இந்தியா கூட்டணியை குறிப்பிடாத அகிலேஷ் யாதவ்!

Marimuthu M HT Tamil
Oct 22, 2023 04:07 PM IST

காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி இடையேயான தொகுதிப் பங்கீட்டுச் சண்டையின் மத்தியில், அகிலேஷ் யாதவ் இந்தியா கூட்டணி குறித்து குறிப்பிடாமல் ஒரு புதிய கூட்டணி பற்றி குறிப்பிட்டுள்ளார்.

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பிடிஏ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் இடுகை ஒன்றைப் பகிர்ந்துள்ளார், இந்தியா கூட்டணி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பிடிஏ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் இடுகை ஒன்றைப் பகிர்ந்துள்ளார், இந்தியா கூட்டணி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ட்ரெண்டிங் செய்திகள்

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் குறித்த தனது சமூக ஊடகப் பதிவில், எஸ்.பி என்னும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் PDA- என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்தியுள்ளார். இந்தியா கூட்டணி பற்றி அவர் எதுவும் சுட்டிக்காட்டவில்லை.

அடுத்த மாதம் மத்தியப்பிரதேசத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. மத்தியப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இந்தியக் கூட்டணிக்கு எந்த இடத்தையும் காங்கிரஸ் விட்டுக் கொடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து இரண்டு கட்சிகளுக்கும் இடையே விரிசல் தொடங்கியது.

சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் வழங்குவதாக காங்கிரஸ் கட்சி சமாஜ்வாடி கட்சியிடம் உறுதி அளித்துவிட்டு, எந்த தொகுதிப் பங்கீட்டு நடவடிக்கையையும் செய்யாததால், இதனை துரோகமாகப் பார்க்கிறது, சமாஜ்வாடி கட்சி. அப்போதிருந்து, அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கட்சியை வசைபாடி வருகிறார். இதன் விளைவாக, மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள 18 தொகுதிகளில் இரு கட்சிகளும் ஒருவருக்கொருவர் எதிராக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

இதனிடையே அகிலேஷ் யாதவ், சமாஜ்வாடி கட்சியின் தொண்டர் ஒருவரின் முதுகில் வரையப்பட்டிருந்த சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் எழுதப்பட்ட குறிப்பின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதில், “மிஷன் 2024. நம் தலைவர் முலாயம் சிங் யாதவ் அழியாமல் இருக்கட்டும். இந்த முறை தேர்தல் வெற்றியை 'PDA' உறுதிசெய்யும். அகிலேஷ் யாதவ் ஏழைகளுக்கு நீதி வழங்குவார்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதில், "பி.டி.ஏ என்பது அடிப்படையில் 'பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு' ("pichre" - meaning backward, Dalit and "alpashankhak - minority)எதிரான சுரண்டல், ஒடுக்குமுறை மற்றும் புறக்கணிப்புக்கு எதிரான பொதுவான உணர்விலிருந்து உருவான ஒற்றுமையின் பெயர்" என்று பொருள் கொள்ளலாம். இந்தப் பெயரை சூட்டி, அகிலேஷ் யாதவ் தேர்தலை எதிர்கொள்ளலாம் என மறைமுகமாக அழைப்புவிடுத்துள்ளார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்

IPL_Entry_Point