Congress: நெருங்கும் தேர்தல் !காங்கிரஸ்க்கு அடுத்த ஆப்பு! வங்கி கணக்குகளை முடக்கியது வருமானவரித்துறை!
”இப்போது எங்களிடம் செலவழிக்கவோ, மின்சாரக் கட்டணங்களைச் செலுத்தவோ, எங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவோ பணம் இல்லை. நியாய் யாத்திரை மட்டுமல்ல, அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் பாதிக்கப்படும்”

காங்கிரஸ் கட்சியின் 4 முக்கிய வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "நாங்கள் வழங்கிய காசோலையை வங்கிகள் எடுத்துக் கொள்ளவில்லை என்று நேற்று எங்களுக்கு தகவல் கிடைத்தது. மேலும் விசாரணையில், இளைஞர் காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது எங்களுக்கு தெரியவந்தது. காங்கிரஸ் கட்சியின் கணக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இளைஞர் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளிடம் இருந்து ரூ.210 கோடி வருமான வரி வசூலிக்கப்பட்டது. எங்கள் கணக்குகளில் உள்ள கிரவுட் ஃபண்டிங் பணம் முடக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் வங்கி கணக்குகளை முடக்குவது என்பது ஜனநாயகத்தை முடக்குவதற்கு சமம் என மக்கான் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக, பொதுத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, பிரதான எதிர்க்கட்சியின் கணக்குகள் அற்பமான காரணங்களுக்காக வரி அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளன,” இப்போது எங்களிடம் செலவழிக்கவோ, மின்சாரக் கட்டணங்களைச் செலுத்தவோ, எங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவோ பணம் இல்லை. நியாய் யாத்திரை மட்டுமல்ல, அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் பாதிக்கப்படும்"