Jammu: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் மரணம்
ஜம்முவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜம்மு: ஜம்முவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
ஜம்முவின் புறநகர் பகுதியான சித்ரா பகுதியில் உள்ள தாவி விஹாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் சகினா பேகம், அவரது இரண்டு மகள்கள் நசீமா அக்தர் மற்றும் ரூபினா பானோ, மகன் ஜாபர் சலீம், இவர்களின் உறவினர்கள் நூர் உல் ஹபீப் மற்றும் சஜாத் அகமத் ஆகியோர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகே இறப்புக்கான காரணம் குறித்து தெரியவரும் என்று காவல்துறை தெரிவித்திருக்கிறது. மேலும், அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
டாபிக்ஸ்