தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  31-year-old Woman Gave Birth To A Child By 13-year-old Boy In Us

US Crime:13 வயது சிறுவனுடன் உடலுறவு.. குழந்தை பெற்ற 31 வயது பெண் - நடந்தது என்ன?

Karthikeyan S HT Tamil
Mar 05, 2023 11:34 AM IST

Sexual Relationship: 13 வயது சிறுவனுடன் கட்டாய பாலியல் உறவு மேற்கொண்டு 31 வயது இளம்பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஆண்ட்ரியா செரானோ
ஆண்ட்ரியா செரானோ

ட்ரெண்டிங் செய்திகள்

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தை சேர்ந்தவர் ஆண்ட்ரியா செரானோ. 31 வயது இளம் பெண்ணான இவர், 13 வயது சிறுவன் ஒருவனுடன் ஆரம்பத்தில் நட்பாக பழகியுள்ளார். இந்த நட்பு நாளடைவில் இருவருக்குமான நெருக்கத்தை அதிகரித்துள்ளது. ஒரு கட்டத்தில் அந்த சிறுவனை கட்டாயப்படுத்தி ஆண்ட்ரியா உடலுறவு கொண்டுள்ளார். இதில், எதிர்பாரதவிதமாக ஆண்டரியா செரானோ கர்ப்பம் அடைந்தார். இந்த விவகாரம் வெளி உலகுக்கு தெரியவர குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளானார் ஆண்ட்ரியா.

இதையடுத்து பவுண்டைன் நகர போலீசார் ஆண்ட்ரியா செரானோ மீது குழந்தை பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கடந்த 2022 ஆம் ஆண்டு அவரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வரும் சூழலில் கர்ப்பிணியாக இருந்த ஆண்ட்ரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதனிடையே, ஆண்ட்ரியா தனது வழக்கறிஞர் மூலம் அரசு வழக்கறிஞரை தொடர்பு கொண்டு தண்டனையை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. எனினும், சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தவர் என்ற அளவில் குற்றச்சாட்டு பதிவாகவும், சிறை தண்டனையில் இருந்து விடுபடுவதற்கான அளவிலான ஒப்பந்தத்திற்கும் ஆண்ட்ரியா சம்மதம் தெரிவித்து உள்ளார். ஆனால், இந்த ஒப்பந்தத்திற்கு பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து சிறுவனின் தாய் கூறுகையில், "ஒரு குழந்தைக்கு 13 வயது குழந்தையாக உள்ள சிறுவன் தந்தையாகி விட்டான். எனது மகனின் குழந்தை பருவம் பறிக்கப்பட்டதை போல் உணர்கிறேன். இப்போது அவன் தந்தையாக வேண்டும். அவன் பாதிக்கப்பட்டுள்ளான். அவனது மீதமுள்ள குழந்தை கால பருவம் வீணாகிவிட்டது. இந்த வழக்கில் பாலினம் தலைகீழாக இருந்திருந்தால் குற்றம் சாட்டப்பட்டவர் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நேர்ந்திருக்கும்.

ஒருவேளை ஆண்ட்ரியா ஆணாக இருந்து, என் மகன் சிறுமியாக இருந்திருந்தால், இந்த வழக்கு நிச்சயம் வேறு பாதையில் பயணித்து இருக்கும். பெண் என்பதற்காக அவர் மீது இரக்கம் காட்டுகிறார்கள் என வேதனை தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் வருகிற மே மாதம் விசாரணை நடந்து தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்