‘சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாள்’ சிரிக்கும் தெரபி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகுமா? சிரிப்பது உங்கள் உடலுக்கு என்ன நன்மைகளைக் கொடுக்கிறது?

சிரிப்பு தெரபி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். சிரிப்பது, சிரிப்பு யோகா என்று அழைக்கப்படுகிறது. இது உங்கள் உடல் மற்றும் மன ஆற்றலை அதிகரிக்கும் எளிய வழிகளுள் ஒன்றாகும். இது உங்கள் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. எனவே உங்கள் உடற்பயிற்சியில் சிரிப்பை ஈடுபடுத்துங்கள், நல்ல உடற்பயிற்சி மற்றும் சிரிப்பு இரண்டும் உங்களின் மனஅழுத்தத்தைக் குறைக்கும். உங்களின் மனநிலையை மாற்றும். நீங்கள் சிரிப்பு தெரபி செய்வதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் வாழ்வின் அங்கமாக சிரிப்பை ஏன் கொள்ளவேண்டும்.
மனஅழுத்தத்தைக் குறைக்கும்
சிரிப்பு, இயற்கையான முறையில் மனஅழுத்தத்தைப்போக்கும் ஒன்றாகும். நீங்கள் சிரிக்கும்போது, உங்கள் உடல் எண்டோர்ஃபின்களை வெளியிடுகிறது. இது ஒரு நல்ல மனநிலையை ஏற்படுத்தும் ஹார்மோன் ஆகும். இது உங்கள் உடலில் ஹார்மோன்களின் அளவைக் கட்டுப்படுத்தும். கார்டிசால் என்பது மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் ஆகும். எனவே உடற்பயிற்சியுடன் நீங்கள் சிரிக்கும்போது, அது உங்களை மேலும் அமைதிப்படுத்துகிறது. டென்சனைக் குறைக்கிறது. உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்கிறது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது
சிரிப்பு, உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்புத்திறன் உருவாக காரணமாகிறது. இதகால் உங்கள் நோய் எதிர்ப்பு செல்கள் ஆற்றலுடன் செயல்படுகின்றன. இது உங்கள் நோய்களைப் போக்குகிறது. தினமும் சிரிப்பதை வழக்கமாக்கிக்கொண்டீர்கள் என்றால், அது உங்களின் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் உங்களக்கு நோய்கள் மற்றும் தொற்றுகள் ஏற்படும்போது, அது உங்கள் உடலை எதிர்த்து போராட உதவுகிறது.