Skin Care Tips: முகத்தை பாதுக்காக்க பராமரிப்பு அவசியம்! எது முக்கியம் தெரியுமா?
Skin Care Tips: இன்ஸ்டண்ட் பொலிவு , இன்ஸ்டண்ட் பிரைட் முகம் என்று பலர் உடனடி தீர்வுகளை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர்.

சுற்றுசூழல் மாசு பாடு பூமியை பாதிப்படைய செய்வது மட்டும் இல்லாமல் மனிதர்களாகிய நம்மையும் அதிகம் பாதிப்படைய செய்கிறது. இந்த மாசு காரணிகளால் அனைவரது சருமம் பெரும் பாதிப்பு அடைகிறது. இந்த பிரச்சனையில் இருந்து விடுபட பல இயற்கையான தீர்வுகள் இருக்கின்றன. ஆனால் சிலர் இதனை செய்வதில்லை இன்ஸ்டண்ட் பொலிவு , இன்ஸ்டண்ட் பிரைட் முகம் என்று பலர் உடனடி தீர்வுகளை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர்.
முகம், சருமம் என அனைத்து பகுதிகளிலும் இறந்த செல்களை மீட்டு உருவாக்கம் செய்யவும். அதிக புற ஊதா கதிர்களால் முகம் கருமை அடைவைதை தவிர்க்கவும் இயற்கை பொருட்களை பயன்படுத்தியே தீர்வு காணலாம். இதன் காரணமாகவே பல இயற்கை மருத்துவ முறை இன்றளவும் பிரபலமாக உள்ளது.
ஈரப்பதத்தை பாதுகாத்தல்
முகத்தின் ஈரப்பதத்தை பாதுகாப்பது சரும பராமரிப்பில் முதன்மை படியாகும். இதனை தினம் தோறும் கடைபிடித்தால், முகம் மிகவும் தெளிவாகவும், பொலிவு ஆகவும் இருக்கும். இதற்கு சிறந்த ஒரு பொருள் தான் கற்றாழை (Aloe vera) ஆகும். தினமும் குளித்து முடித்த பின் கற்றாழையை நம் முகத்தில் தடவ வேண்டும். இது இயற்கையான முறையில் முகத்தி ஈரப்பதத்தை பாதுகாக்கும்.