தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Dark Circle : கண்களுக்குக் கீழே உள்ள கருமையைப் போக்க என்ன செய்ய வேண்டும்.. இத பாலோ பண்ணா போதும்!

Dark Circle : கண்களுக்குக் கீழே உள்ள கருமையைப் போக்க என்ன செய்ய வேண்டும்.. இத பாலோ பண்ணா போதும்!

Divya Sekar HT Tamil
Feb 16, 2024 01:03 PM IST

Dark Circle: இந்த வீட்டு வைத்திய முறையில் கண்களுக்குக் கீழே உள்ள கருமையை நீக்க முடியும். அதுகுறித்து இதில் தெரிந்து கொள்ளலாம்.

கண்களுக்குக் கீழே கருவளையம்
கண்களுக்குக் கீழே கருவளையம் (Freepik)

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது ஆண்களுக்கும் கண்களுக்கு கீழ் கருவளையம் தோன்றுவது அதிகரித்துவருகிறது. பருவ வயதை அடையும் பெண்களுக்கும் முன்கூட்டியே இந்த பிரச்சனை அதிகரித்துவருகிறது. முகத்தில் அந்த இடம் மட்டும் கருப்பாக தெரி யும் அளவுக்கு கருவளையம் இருக்கிறது.

கண்களுக்குக் கீழே உள்ள கரும்புள்ளிகளை நீக்குவது அவ்வளவு எளிதல்ல. கண்களுக்குக் கீழே உள்ள கருமையைப் போக்க என்ன செய்ய வேண்டும் என்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம். 

முகத்தில் கண்களுக்கு கீழ் இருக்கும் சதை பகுதி மட்டும் மிக மிக மென்மையாகவே இருக்கும். அத னால் கண்களுக்கு அதிக வேலை கொடுக்கும் போது கண்களோடு இந்த சதைபகுதியும் பாதிப்படை கிறது. இருட்டில் செல்ஃபொன் பயன்படுத்துவது, டீவியின் அருகில் அமர்ந்து பார்ப்பது, இரவு நீண்ட நேரம் விழித்திருப்பது, ஊட்டசத்து குறைபாடு, அதிக மன அழுத்தம் இவையெல்லாமே கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை அதிகப்படுத்தி விடுகிறது.

கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை எளிதில் நீக்கும் சில வீட்டுத் வைத்திய முறைகளை இங்கே பார்க்கலாம்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு சாற்றை கண்களுக்கு அடியில் தடவ வேண்டும். உருளைக்கிழங்கு சாறு கரும்புள்ளிகளை போக்க உதவுகிறது. இது இயற்கையான ப்ளீச் ஆக செயல்படுகிறது.

பருத்தி உருண்டை

பருத்தி உருண்டையை பச்சை பாலில் நனைத்து கண்களுக்கு அடியில் தடவலாம். பச்சைப் பாலை கண்களுக்கு அடியில் தடவினால் மை எளிதில் நீங்கும்.

நிறைய தண்ணீர் குடி

தண்ணீர் குடிப்பதால் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். தோல் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும். நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், உங்கள் கண்களுக்குக் கீழே கரும்புள்ளிகள் தோன்றும்.

ஊட்டச்சத்து குறைபாடு

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. எனவே கண் கருமையை நீக்க சரியான உணவை உண்ண வேண்டும். உடலுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெயுடன் இரண்டு டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள். பிறகு ஒரு டீஸ்பூன் காபி தூள் சேர்த்து நன்றாக க்ரீம்பதத்துக்கு கலக்குங்கள். எண்ணெயுடன் கற்றழை ஜெல் காபித்தூள் இரண்டுமே கலக்காது என்றாலும் அகன்ற பாத்திரத்தில் சுடுதண்ணீரை கொதிக்க வைத்து அந்த நீருக்குள் இந்த பெளலை வைத்து கலக்கி கொண்டே இருந்தால் க்ரீம் பதத்துக்கு தயாராகும். இதை காற்றுபுகாத டப்பாவில் வைத்து தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு கண்களுக்கு கீழ் தடவி கொள்ளுங்கள். இவை சருமத்தை நன்றாக இறுக்கி பிடிக்கும்.

தூங்காமல் இருப்பது

இது தவிர தூங்காவிட்டாலும் கண்களுக்குக் கீழே மை விழுகிறது. தினமும் 8 முதல் 9 மணி நேரம் தூங்கினால் கண்களுக்குக் கீழே உள்ள கரும்புள்ளிகள் நீங்கும். உங்களுக்கு போதுமான தூக்கம் வரவில்லை என்றால், உங்கள் கண்களுக்குக் கீழே கருவளையங்கள் ஏற்படும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்