Karthigai Deepam: ‘அம்பிகாவின் அட்ராசிட்டி.. அரங்கத்தில் நாதஸ்வர இசை.. வெளுத்த கார்த்திக்! -கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: ‘அம்பிகாவின் அட்ராசிட்டி.. அரங்கத்தில் நாதஸ்வர இசை.. வெளுத்த கார்த்திக்! -கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: ‘அம்பிகாவின் அட்ராசிட்டி.. அரங்கத்தில் நாதஸ்வர இசை.. வெளுத்த கார்த்திக்! -கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Aug 20, 2024 11:50 AM IST

Karthigai deepam: ஐந்து கொலை ஆறுமுகம் போனை எடுத்து தீபா வரல கார்த்திக் தான் வந்தான், எல்லாரையும் அடித்து போட்டுட்டு போய்ட்டான். இனிமே 1 வருஷத்துக்கு என்னை கூப்பிடாதீங்க என்று போனை வைக்க, இவர்கள் அதிர்ச்சியாகின்றனர். - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: ‘அம்பிகாவின் அட்ராசிட்டி.. அரங்கத்தில் நாதஸ்வர இசை.. வெளுத்த கார்த்திக்! -கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: ‘அம்பிகாவின் அட்ராசிட்டி.. அரங்கத்தில் நாதஸ்வர இசை.. வெளுத்த கார்த்திக்! -கார்த்திகை தீபம் அப்டேட்!

தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மைதிலியை கடத்தி, ரவுடி தீபாவை குடோனுக்கு வர சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

துவம்சம் செய்த கார்த்திக் 

அதாவது, குடோனுக்கு வந்த கார்த்திக், ரவுடிகளை அடித்து துவம்சம் செய்து மைதிலியை காப்பாறுகிறான். மறுபக்கம், ஐஸ்வர்யா என்னாச்சுன்னு தெரியலையே என்று சந்தேகப்பட்டு, ஐந்து கொலை ஆறுமுகத்துக்கு போன் செய்கிறாள். ஐஸ்வர்யாவை சுற்றி கோகிலா, ரூபாஸ்ரீ ஆகியோர் இருக்க, போனை ஸ்பீக்கரில் போடுகிறாள். 

வீட்டிற்குள் அடைத்து வைத்த போலீஸ்!

ஐந்து கொலை ஆறுமுகம் போனை எடுத்து தீபா வரல கார்த்திக் தான் வந்தான், எல்லாரையும் அடித்து போட்டுட்டு போய்ட்டான். இனிமே 1 வருஷத்துக்கு என்னை கூப்பிடாதீங்க என்று போனை வைக்க, இவர்கள் அதிர்ச்சியாகின்றனர். அடுத்து போலீஸ் ரியாவை ஒரு வீட்டிற்குள் அடைத்து வைக்க, அவள் என்னை எதுக்கு இங்க கொண்டு வந்தீங்க என்று கேள்வி கேட்கிறாள். அதற்கு போலீஸ் தரப்பு, நாங்க சொல்ற வரைக்கும் நீங்க இங்க தான் இருக்கனும் என்று சொல்கின்றனர். 

கழட்டிவிட்ட ரம்யா 

பிறகு ரூமுக்கு சென்ற ரியா, ரம்யாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லி எல்லாம் கார்த்தி பிளான் தான் என்று சொல்கிறாள். ரம்யா சரி எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். இனி எனக்கு போன் பண்ணாத என்று சொல்லி, சிம் கார்டை உடைத்து போடுகிறாள். மறுபக்கம் மண்டபத்தில் தர்மலிங்கம் நாதஸ்வர கச்சேரி நடக்க அம்பிகா அதை கேட்டு ரசிக்கிறாள்.

அம்பிகாவின் அட்ராசிட்டி 

பிறகு அவருக்கு பிடித்த மூன்று சினிமா பாடல்களை சொல்ல, தர்மலிங்கம் அந்த பாடல்களையும் நாதஸ்வரத்தில் வாசித்து, அசர வைக்கிறார், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: