Karthigai deepam: தீபா சைக்கோவாக மாரியது ஏன்?.. அதிர்ச்சியின் உச்சத்தில் கார்த்திக் - கார்த்திகை தீபம் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: தீபா சைக்கோவாக மாரியது ஏன்?.. அதிர்ச்சியின் உச்சத்தில் கார்த்திக் - கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai deepam: தீபா சைக்கோவாக மாரியது ஏன்?.. அதிர்ச்சியின் உச்சத்தில் கார்த்திக் - கார்த்திகை தீபம் அப்டேட்

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 03, 2024 03:29 PM IST

Karthigai deepam: கார்த்திக், தீபா குடித்த ஜூஸை லேப் டெஸ்ட்க்கு அனுப்பி வைத்திருந்த நிலையில், அதன் ரிசல்ட் குறித்து விசாரிக்க வந்திருந்தான். - கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai deepam: தீபா சைக்கோவாக மாரியது ஏன்?.. அதிர்ச்சியின் உச்சத்தில் கார்த்திக் - கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai deepam: தீபா சைக்கோவாக மாரியது ஏன்?.. அதிர்ச்சியின் உச்சத்தில் கார்த்திக் - கார்த்திகை தீபம் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யா கார்த்திக்கிடம் பிசினஸ் விஷயமாக பெங்களூர் செல்ல வேண்டும் என்று கூறிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்

தீபாவிற்காக கோயிலுக்கு சேலை வாங்க வந்த அபிராமி.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

ரம்யா கார்த்திக்கை பெங்களூருக்கு தன்னுடன் வரக் கேட்டிருந்த நிலையில், அவனும் சம்மதம் தெரிவிக்கிறான். இதற்கிடையே தீபாவுக்கு அடுத்தடுத்து நடக்கும் மோசமான விஷயங்களை தடை செய்ய அபிராமியும், மீனாட்சியும் கோயிலுக்கு வந்தனர். அங்கு அவளுக்கு பதிலாக விளக்கு போட்டு, ஏலம் விடப்படும் அம்மன் புடவையை வாங்கிச் செல்ல முடிவு செய்தனர். தீபாவுக்காக பரிகாரத்தை நான் செய்யலாமா என்று அபிராமி கேட்க, அவளுடைய புருஷன் கார்த்திக் தான் செய்யணும் என்று சொல்லப்படுகிறது. 

மறுபக்கம் கார்த்திக், தீபா குடித்த ஜூஸை லேப் டெஸ்ட்க்கு அனுப்பி வைத்திருந்த நிலையில், அதன் ரிசல்ட் குறித்து விசாரிக்க வந்திருந்தான். அப்போது, அதில் ஒரு மாத்திரை கலந்து இருந்ததும், அதை சாப்பிட்டால் கொஞ்சம் நேரத்திற்கு சைக்கோ போல் நடந்து கொள்வார்கள் என்பதையும் அவன் தெரிந்து கொண்டான். இதையடுத்து கார்த்திக் யார் இந்த வேலையை செய்திருப்பா என்று மண்டையைபோட்டு குழப்பிக்கொள்கிறான். 

மறைந்திருந்து பார்க்கும் ரம்யா.. என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழம்பும் கார்த்திக் 

இதையெல்லாம் ரம்யாவும் மறைந்திருந்து பார்க்கிறாள். பிறகு கார்த்திக் அங்கிருந்து சென்றதும், ரிசப்ஷனில் இருப்பவருக்கு பணத்தை கொடுத்து, அங்கு கார்த்திக் வந்த காரணத்தையும், அதற்கு பின்னால் உள்ள சம்பவத்தையும் தெரிந்து கொள்கிறாள். இதற்கிடையே கார்த்திக் போனை அங்கேயே மறந்து வைத்திட்டு சென்றிருக்க, அவன் திருப்பி வருகிறான். அப்போது ரம்யா மீண்டும் மறைந்து கொள்கிறாள். 

அதன் பிறகு அபிராமி கோயிலில் மீனாட்சியிடம், ரம்யாவோட அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க, நீ அவங்க வீட்டு அட்ரஸ் கேளு, நாம போய் பார்த்திட்டு வந்துடலாம் என்று சொன்னாள். இதனையடுத்து மீனாட்சி ரம்யா வீட்டின் அட்ரஸ் கேட்டு வாங்கினாள். அதனை தொடர்ந்து இருவரும் ரம்யா வீட்டிற்கு கிளம்பி செல்கின்றனர்.

மறுபக்கம் ரம்யா கார்த்திக்கிடம் இருந்து மோதிரத்தை வாங்கியவனை வீட்டிற்கு அழைத்து அவனுக்கு பணத்தை கொடுத்து, கார்த்திக்கு கொடுத்த மோதிரத்தை திரும்ப வாங்கி கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: