Karthigai Deepam: அம்பிகா வைத்த ஆப்பு; கரும்பு சக்கையான ரம்யா.. ராட்டினம் ஆடும் ரியா! - கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: அம்பிகா வைத்த ஆப்பு; கரும்பு சக்கையான ரம்யா.. ராட்டினம் ஆடும் ரியா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: அம்பிகா வைத்த ஆப்பு; கரும்பு சக்கையான ரம்யா.. ராட்டினம் ஆடும் ரியா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Aug 29, 2024 12:15 PM IST

Karthigai deepam: கார்த்திக் எங்கே போனான் என்று தெரியாமல் எல்லோரும் தவித்து கொண்டிருக்க, அருண் மற்றும் ஆனந்த் அவனுக்கு போன் செய்கின்றனர். ஆனால் அவன் போனை எடுக்கவில்லை. - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: அம்பிகா வைத்த ஆப்பு; கரும்பு சக்கையான ரம்யா.. ராட்டினம் ஆடும் ரியா! - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: அம்பிகா வைத்த ஆப்பு; கரும்பு சக்கையான ரம்யா.. ராட்டினம் ஆடும் ரியா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கார்த்திக் டாக்டரை பார்த்து விட்டு, வந்து கொண்டிருக்க, மண்டபத்தில் அவனை காணாமல் அனைவரும் பதறி இருந்தனர். இந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

போலி தீபா
போலி தீபா

கார்த்திக் எங்கே போனான்

அதாவது, கார்த்திக் எங்கே போனான் என்று தெரியாமல் எல்லோரும் தவித்து கொண்டிருக்க, அருண் மற்றும் ஆனந்த் அவனுக்கு போன் செய்கின்றனர். ஆனால் அவன் போனை எடுக்கவில்லை. இன்னொரு பக்கம் தீபா ஆட்டோவில் மண்டபத்தை நோக்கி வேகவேகமாக பதறி வந்து கொண்டிருக்கிறாள்.

ரம்யா முகத்திற்கு மாறிய முகத்திரை

மணமேடையில் அதுவரை ரியா, தீபாவின் முகத்திரையை அணிந்து கொண்டு, தீபாவின் கெட்டப்பில் இருந்த நிலையில், தற்போது முகூர்த்த நேரம் நெருங்கி விட்டதால், தற்போது ரம்யா தீபாவின் முகத்திரையை அணிந்து கொண்டு மணமேடையில் அமர்ந்து இருக்கிறாள். இந்த சமயத்தில் தீபா கல்யாண மண்டபத்திற்கு வந்து விட, அனைவரும் அதிர்ச்சியும் குழப்பமும் அடைகின்றனர்.

உண்மையான ரம்யா
உண்மையான ரம்யா

தீபா, நான் தான் உண்மையான தீபா என்று சொல்ல, ரம்யா இல்ல நான் தான் உண்மையான தீபா என்று சொல்கிறாள். இந்த நிலையில், தர்மலிங்கம், ஜானகி உட்பட எல்லாரும் உண்மையான தீபா யார் என்று தெரியாமல் குழப்பத்தில் மூழ்கி விட்டனர்.

அம்பிகா
அம்பிகா

இந்த நிலையில், மயக்கத்தில் இருந்த அம்பிகா எழுந்து வெளியே வர ரம்யா அதிர்ச்சி அடைகிறாள். வெளியே இருப்பவள் தான் உண்மையான தீபா. மணமேடையில் இருப்பது ரியா என்று அவள் ரம்யாவின் முகத்திரையை கிழிக்க, அது ரம்யா என தெரிய வர அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன? 

டாக்டர் ப்ரியா, அபிராமி அம்பிகாவுடன் தன்னை சந்திக்க வந்திருந்ததாக கார்த்தியிடம் சொன்னாள். மேலும், அவங்களை ஹாஸ்பிடலில் அட்மிட் ஆக சொல்லி இருந்தேன். ஆனால், அவங்க உன் கல்யாணத்தை பார்க்கணும்னு ஆசைபட்டாங்க. கல்யாணம் முடிந்ததும் கூட்டிட்டு வந்துடுங்க, ட்ரீட்மெண்ட் ஆரம்பித்து விடலாம் என சொல்ல கார்த்திக் மீண்டும் மண்டபத்திற்கு கிளம்பி சென்றான். 

இதற்கிடையே தீபா வந்த ஆட்டோவும் சரியாகி விட, அவள் மீண்டும் மண்டபத்திற்கு கிளம்பி வந்தாள். இன்னொரு பக்கம் கார்த்திக் மீண்டும் மண்பத்திற்கு காரில் வந்து கொண்டிருந்த போது, ஒரு பெண்ணிடம் ஒருவன் தாலியை பறித்துக் கொண்டு ஓட, கார்த்திக் அவனை துரத்தி சென்றான். அங்கே, மண்டபத்தில் கடைசி நிமிடத்தில் கார்த்தி எங்கே போனான் என்று டென்ஷனாகி அனைவரும் நின்றனர். 

 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: