Yuvan shankar raja: நான் வீட்டு வாடகை கொடுக்கலையா? ‘பேரை கெடுத்துட்டாங்க..’- 5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் யுவன்!
yuvan shankar raja: 20 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்திருப்பதாக யுவன் ஷங்கர் ராஜா மீது புகார் அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லேக் பகுதியில் வசித்து வந்தார். இந்த வீடு அஜ்மத் பேகம் என்பவருக்கு சொந்தமானது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அவரது சகோதரர் முகமது ஜாவித், நேற்றைய தினம் யுவன் மீது திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார்.
யுவன் மீது பரபரப்பு புகார்
அந்த புகாரில், “ இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கடந்த 2 வருடங்களாக சென்னை நுங்கம்பாக்கம் லேக் பகுதியில் இருக்கும் எனது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். அவர் என்னுடைய சகோதரிக்கு 20 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்திருக்கிறார். இது குறித்து என்னுடைய சகோதரி கேட்கும் போதெல்லாம் யுவன் அதனை தர மறுத்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் இது குறித்து கேட்க, நான் அவரை போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் போனை எடுக்க வில்லை. இதற்கிடையே வீட்டில் இருந்து அவர் பொருட்களை எடுத்துக்கொண்டு சென்று கொண்டிருப்பதாக அருகில் வசிப்பவர்கள் கூறுகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக அவர் பொருட்களை எடுத்து வீட்டை காலி செய்ய முயற்சித்து வருகிறார்.ஆகையால் இது தொடர்பாக விசாரணை நடத்தி வாடகை மற்றும் சேதத்துக்கான இழப்பீட்டை பெற்று தர வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.