Surya: கதையவே மாத்த சொல்லிட்டாங்கப்பா';சூர்யா கொடுத்த நெருக்கடி! - மாஸ் ஃப்ளாப்பிற்கு இதுதான் காரணம்! - வெங்கட் பிரபு!
Surya: சில படங்களில் நான் கதையை மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தயாரிப்பு தரப்போ அல்லது நடிகர் தரப்போ அல்லது அங்கு இருக்கும் திரை துறையோ தள்ளி விடுகிறது. அப்போது அதுவேலை செய்யாமல் போய்விடுகிறது - வெங்கட் பிரபு!

Surya: கதையவே மாத்த சொல்லிட்டாங்கப்பா' .. சூர்யா கொடுத்த நெருக்கடி! - மாஸ் ஃப்ளாப்பிற்கு இதுதான் காரணம்! - வெங்கட் பிரபு!
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில், நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தின் புரோமோஷனுக்காக இயக்குநர் வெங்கட் பிரபு, கலாட்டா சேனலுக்கு பேட்டிக்கொடுத்தார். அந்தப்பேட்டியில் சூர்யாவுடன் இணைந்த மாஸ் திரைப்படம் தோல்வி அடைந்தது குறித்து பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “உண்மையில் மாஸ் என்கிற மாசிலாமணி படத்தை மிகவும் சிம்பிளாகத்தான் எடுக்க நினைத்தேன். கதாநாயகனுக்கு ஒரு விபத்து நடக்கிறது. அந்த விபத்திற்கு பிறகு அவனுக்கு பேய்களுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கிறது.அப்போது அதில் ஒரு பேய், அவனிடம் உதவி கேட்க முன் வந்து, அவனை தன் வசம் ஆக்குவதற்கு முயற்சி செய்கிறது. இவ்வளவுதான் நான் கதையாக எழுதி இருந்தது.