Neengal Kettavai: பாலு மகேந்திரா காவியம்.. எப்போதும் ஒலிக்கும் இளையராஜா.. மக்களுக்காக நீங்கள் கேட்டவை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Neengal Kettavai: பாலு மகேந்திரா காவியம்.. எப்போதும் ஒலிக்கும் இளையராஜா.. மக்களுக்காக நீங்கள் கேட்டவை!

Neengal Kettavai: பாலு மகேந்திரா காவியம்.. எப்போதும் ஒலிக்கும் இளையராஜா.. மக்களுக்காக நீங்கள் கேட்டவை!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 28, 2024 05:45 AM IST

40 years Neengal Kettavai: இளையராஜா, பாலு மகேந்திரா இணைந்தால் அங்கே இசை விருந்துக்கு எந்த குறையும் இருக்காது. அப்படி மிகப்பெரிய கூட்டணியில் இவர்களும் சிறந்த கூட்டணி ஆவார். பாலு மகேந்திராவின் ஒன் அண்ட் ஒன்லி கமர்ஷியல் படமாக இருக்கும் நீங்கள் கேட்டவை வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் ஆகிறது.

பாலு மகேந்திரா காவியம்.. எப்போதும் ஒலிக்கும் இளையராஜா.. மக்களுக்காக நீங்கள் கேட்டவை!
பாலு மகேந்திரா காவியம்.. எப்போதும் ஒலிக்கும் இளையராஜா.. மக்களுக்காக நீங்கள் கேட்டவை!

பாலு மகேந்திரா படங்கள் கதை, திரைக்கதை மட்டுமில்லாமல் மற்ற டெக்கினிக்கல் விஷயங்களும் பக்கவாக இருக்கும். இதுவே அவருக்கு பெயரையும், புகழையும் பெற்று தந்தது. அதேபோல் பாலுமகேந்திராவால் இதுபோன்ற படங்கள் மட்டுமே எடுக்க முடியும் என்ற விமர்சனங்களும் எழுந்தன. இதை உடைக்கும் விதமாகவும், குத்து பாடல், கவர்ச்சி, ஆக்‌ஷன், சென்டிமெண்ட் என ஜனரஞ்சக விஷயங்கள் கலந்த பக்காவான கமர்ஷியல் படமும் தன்னால் இயக்க முடியும் என அவர் உருவாக்கிய படம் நீங்கள் கேட்டவை.

1980 காலகட்டத்தில் முக்கிய ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்த தியாகராஜன், தெலுங்கு நடிகரான பானு சந்தர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க சில்க் ஸ்மிதா, பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். ஹீரோயினாக நடிகை அர்ச்சனா இந்த படத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டார். ஜெய்சங்கர் வில்லன் வேடத்தில் நடித்திருப்பார்.

அம்மாவை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த நபர் சகோதரர்கள் இருவர் பழிவாங்குவது தான் படத்தின் ஒன் லைன். இதில், காதல், கலாட்டா, காமெடி, கவர்ச்சி, எமோஷன் என கமர்ஷியல் சினிமாவுக்கு தேவையான அத்தனை ரசனைகளையும் அள்ளி கொட்டியிருப்பார் இயக்குநர் பாலுமகேந்திரா. இதற்காக படத்துக்கு நீங்கள் கேட்டவை என டைட்டிலும் வைத்திருப்பார்.

இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் ஆண்டின் சூப்பர் ஹிட் பட லிஸ்டில் இணைந்தது. இருப்பினும் விமர்சகர்கள் பாலுமகேந்திராவை மீண்டும் சீண்டும் விதமாக இதையா பாலுமகேந்திராவிடம் கேட்டோம் என்று கேள்வியும் முன் வைத்தனர். ஆனால் தனது திறமை நிருபிக்க தன்னை தானே பரிசோதனை செய்து கொண்ட பாலு மகேந்திரா அதில் வெற்றியும் பெற்றார்.

படத்துக்கு இளையராஜா இசையமைத்திருப்பார். படத்தில் தியாகராஜன், சில்க் ஸ்மிதா உள்பட குழுவினர் நடனமாட தாளம் போடுவதுடன், கால்களை ஆட வைக்கும் விதமாக அமைந்திருக்கும் அடியே மனம் நில்லுனா நீக்காதடி பாடல் இன்றும் பார்டிகள், திருவிழாக்கள், மகிழ்ச்சியான தருணங்களில் தவறாமல் ஒலிக்கும் குத்துப்பாடல்களில் ஒன்றாக உள்ளது.

மெலடிக்கு ஓ வசந்த ராஜா என்ற பாடலை கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் கேமரா மூலம் அழகான காட்சிபதிவுகளால் கண்களுக்கு விருந்து படைத்திருப்பார். பிள்ளை நிலா, கனவு காணும் பாடல்கள் கிளாசிக் பாடல்களாக இருந்து வருகின்றன.

பாலு மகேந்திராவின் படைப்பில் அழியாத காவியமாக இன்று வரை நீங்கள் கேட்டவை திரைப்படம் இருந்து வருகிறது. குறிப்பாக தமிழ் சினிமாவை பற்றி கற்றுக் கொள்ள விரும்பும் பல இளம் இயக்குனர்களுக்கு இந்த திரைப்படம் விருந்தாக இருக்கும் என்று கூறினால் அது மிகையாகாது.

எதார்த்தத்தை திரைப்படம் ஆக்கி மக்களை அவ்வப்போது திருப்தி படுத்த கூடிய இயக்குனர்கள் பாலு மகேந்திராவின் பட்டறையில் இருந்து வந்தவர்கள் தான். இளையராஜா, பாலு மகேந்திரா இணைந்தால் அங்கே இசை விருந்துக்கு எந்த குறையும் இருக்காது. அப்படி மிகப்பெரிய கூட்டணியில் இவர்களும் சிறந்த கூட்டணி ஆவார்.

பாலு மகேந்திராவின் ஒன் அண்ட் ஒன்லி கமர்ஷியல் படமாக இருக்கும் நீங்கள் கேட்டவை வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9