Sukumari:மறக்குமா நெஞ்சம்.. மலையாள சினிமாவின் மனோரமா சுகுமாரி நினைவு நாள் இன்று!
Actress Sukumari : பழம்பெரும் திரைப்பட நடிகையும், மறைந்த புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் ஏ.பீம்சிங்கின் மனைவியுமான சுகுமாரி நினைவு நாளான இன்று அவரை நினைவு கூர்வோம்.

நடிகை சுகுமாரி 1940ஆம் ஆண்டு பிறந்தார். அண்ணாவின் திரைக்கதையில் உதித்த ஓர் இரவு என்ற படத்தில், சிறுமியாக இருக்கும்போதே நடிக்கத் தொடங்கினார். இதுதான் அவருக்கு முதல்படம். அப்போது சுகுமாரிக்கு 11 வயது. இதைத் தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் அதிகம் வந்தது.
நல்ல அம்மாவாகவும் நடிப்பார்.வில்லி மாமியாராகவும் நடித்தார்.எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடிப்பார். இந்த சமயத்தில் மலையாளப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தன. நல்ல நல்ல கேரக்டர்களாக அமைந்தன. சுகுமாரி தனது 19ஆவது வயதில் 1959ல் இயக்குநர் பீம்சிங்கின் இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டார்.
திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கு, மலையாளம் முதலான ஆறு மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார். இவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை ஏற்று அப்படியே நடிப்பார். இதனால் மலையாளப் படவுலகில், எந்த இயக்குநர் படமெடுத்தாலும் முதலில் புக் செய்வது சுகுமாரியைத்தான். கதை பண்ணும்போதே, சுகுமாரிதான் இந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்து, அவரின் கால்ஷீட்டை வாங்கிவிடுவார்கள்.