Story Of Song: 'கமல்.. இளையராஜாவை கும்பிடுவீங்க..' தாலாட்டுதே வானம் பாடல் பிறந்த கதை!
கடல் மீன்கள் படத்தில் இடம் பெற்ற தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம் பாடல் உருவான கதை குறித்து தான் இதில் நாம் பார்க்க போகிறோம்.

தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம் பாடல்
1981 ஆம் ஆண்டு ஜி. என். ரங்கராஜன் இயக்கத்தில் கமல்ஹாசன், சுஜாதா நடிப்பில் வெளியான படம் கடல் மீன்கள். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கண்ணதாசன், பஞ்சு அருணாசலம் கங்கை அமரன் பாடல்களை எழுதியுள்ளனர்.
கமல் நடிப்பில் ஜி. என். ரங்கராஜன் இயக்கத்தில் வெளியான கல்யாண ராமன், எல்லாம் இன்ப மயம் என பல படங்கள் அடுத்து அடுத்து பல ஹிட்களை கொடுத்தது. ஆனால் இவர்களின் வெற்றிபாதையில் சரிவு ஏற்பட தொடங்கியது. ஜி. என். ரங்கராஜன் தயாரிப்பில் இறங்கி நஷ்டத்தை சந்திக்கிறார்.
அப்போது இவருக்கு உதவும் விதமாகவும், அவரது நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாகவும் கமல்ஹாசன் சம்பளம் வாங்காமலும், இசையமைப்பாளர் இளையராஜாவும் எந்த பணமும் பெறாமல் இசையமைத்து கொடுக்கிறார்.