Tamil Actress Rekha: ‘எல்லாம் ஹார்மோன் பார்த்த வேலை..பிளேபாயாய் சுத்திக்கிட்டு’ - ஓப்பனாக பேசிய சத்யராஜ்
Tamil Actress Rekha: அப்போதெல்லாம் ஒரு பெண்ணுக்கு நம்மை பிடிக்கிறது என்றால், அவரிடம் நமக்கும் அவர் மீது விருப்பம் இருக்கிறது என்று சொல்லி, அடுத்த கட்டத்திற்கு காதலை கொண்டு செல்வது என்பது மிகப்பெரிய குதிரை கொம்பு. - சத்யராஜ் பேட்டி!

Tamil Actress Rekha: நடிகை ரேகாவும், நடிகர் சத்யராஜூம் இன்றைய கால காதல் குறித்து லிட்டல் டாக்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தனர்.
ஹார்மோன் சரியாக வேலை செய்யவில்லை
அந்த பேட்டியில் சத்யராஜ் பேசும் பொழுது, “நான் கல்லூரியில் மிகப்பெரிய பிளேபாயாக தான் இருந்தேன். அப்படி இல்லை என்றால், ஹார்மோன் சரியாக வேலை செய்யவில்லை என்றுதானே அர்த்தம். இந்த காலத்தில் எல்லோரும் செல்போன் மூலம் கடலை போட்டுக் கொள்கிறார்கள்.
ஆனால், அந்த காலத்தில் அப்படியெல்லாம் இல்லை ஒருவரையொருவர் தொடர்பு கொள்வது என்பது மிக மிக அரிதாக இருந்தது. கஷ்டமாக இருந்தது. அதனால் நாங்களே எங்களுக்குள்ளேயே கற்பனையிலேயே வண்டி ஓட்டிக் கொண்டிருப்போம். அப்போதெல்லாம் ஒரு பெண்ணுக்கு நம்மை பிடிக்கிறது என்றால், அவரிடம் நமக்கும் அவர் மீது விருப்பம் இருக்கிறது என்று சொல்லி, அடுத்த கட்டத்திற்கு காதலை கொண்டு செல்வது என்பது மிகப்பெரிய குதிரை கொம்பு. அந்த காலத்தில் எல்லாம் கடுமையாக உழைத்தால் மட்டுமே ஒரு பெண் நமக்காக கிடைப்பாள்” என்று பேசினார்.