Singappenne: கனவு உலகத்தில் அன்பு.. அழகனை நினைத்து உருகும் ஆனந்தி- சிங்கப்பெண்ணே சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singappenne: கனவு உலகத்தில் அன்பு.. அழகனை நினைத்து உருகும் ஆனந்தி- சிங்கப்பெண்ணே சீரியல்

Singappenne: கனவு உலகத்தில் அன்பு.. அழகனை நினைத்து உருகும் ஆனந்தி- சிங்கப்பெண்ணே சீரியல்

Aarthi Balaji HT Tamil
Published Aug 09, 2024 12:23 PM IST

Singappenne: அன்பு நேரம் ஆகிவிட்டது வந்து வண்டியை எடுக்குமாறு கூறினார். தொடர்ந்து வண்டியில் போகும் போது அனைவரும் பேசி சிரித்து கொண்டு வந்தனர்.

கனவு உலகத்தில் அன்பு.. அழகனை நினைத்து உருகும் ஆனந்தி- சிங்கப்பெண்ணே சீரியல்
கனவு உலகத்தில் அன்பு.. அழகனை நினைத்து உருகும் ஆனந்தி- சிங்கப்பெண்ணே சீரியல்

அதில், ஆனந்தியின் அண்ணன் ஆக்டிங் டிரைவர் ஆக அழைத்த காரணத்தினால் யார் எவர் என்று கேட்காமல் பணிக்கு வந்தார். வந்து பார்த்தபோது ஆனந்தி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் தான் ஓட்டுனராக வரவில்லை என்று சொல்லி கிளம்பினார்.

மித்ரா பேச்சால் கடுப்பு

அதைப் பார்த்து அன்பு நேரம் ஆகிவிட்டது வந்து வண்டியை எடுக்குமாறு கூறினார். தொடர்ந்து வண்டியில் போகும் போது அனைவரும் பேசி சிரித்து கொண்டு வந்தனர். அது மித்ராவிற்கு பிடிக்காமல் குழந்தைத்தனமாக எல்லாரும் நடந்து கொள்ளாதீர்கள் என்று முகத்தில் அடித்தபடி பேசினார். இதனால் அந்த இடமே சற்று அமைதியானது.

அன்பின் கனவுக்கு எல்லை இல்லையா?

இறுதியாக ஆனந்தியும், அன்பும் தமிழ் பாடலுக்கு மகிழ்ச்சியாக நடனம் ஆடுவது போன்று ப்ரோமோ முடிக்கப்பட்டது. இதைப் பார்த்து ரசிகர்கள் எப்படியும் இது அன்பின் கனவாக தான் இருக்கப் போகிறது நிஜத்தில் நடக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு தான். ப்ரோமோ கன்டென்ட் வேண்டும் என்பதற்காக தான் இப்படி போட்டு இருப்பார்கள் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

மித்ரா மூலம் பிரச்னை

மிகவும் மகிழ்ச்சியாக கிளம்பும் ஆனந்திக்கு மித்ரா மூலம் ஒரு பக்கம் பிரச்சனையும் மறுபக்கம் கிராமத்தில் இருக்கும் வில்லனால் என்ன மாதிரியான பிரச்சினைகள் வரும் என்று பார்க்கலாம்.

நேற்றைய எபிசோட்

சிங்கப்பெண்ணே சீரியலில் நேற்றைய எபிசோட்டில், “ சிவரக்கோட்டை பச்சை அம்மன் கோயில் திருவிழா கோலாகலாமாக தொடங்க உள்ளது என்று ஆட்டோவில் பேசிய படி செல்கிறார்கள். அந்த வழியாக வந்த ஆனந்தியின் குட்டி தோழி, வில்லனிடம் சென்று, “ திருவிழா என்றால் யார் வருவாங்களோ இல்லையோ.. எங்க தீ வருவா.. என சொல்ல உடனே அவர், யார் உங்க தீ என்று கேட்டார்.

கெத்தாக எங்க ஆனந்தி வருவாள் என்று சொல்கிறாள் அந்த குட்டி தோழி.

கிளம்பும் புது பிரச்னை

சிவரக்கோட்டைக்கு செல்கிறோம் அலப்பறை கிளப்புறோம் என்று ஆனந்தி, அன்பு, மகேஷ், ஜெயந்தி, முத்து உள்ளிட்ட நண்பர்கள் அனைவரும் கிளம்பி விட்டார்கள். அவர்கள் செல்லும் வேனின் ஓட்டுநராக ஆனந்தியின் அண்ணன், மாஸ்க் அணிந்து கொண்டு வருகிறார். யாரும் எதிர்பார்க்காத விதமாக மகேஷை குழப்ப வேண்டும் என்ற காரணத்தினால் மித்ராவும் தான் உடன் வருகிறேன் என கிளம்பினார்.

வில்லன் சிவரக்கோட்டையை விட்டு மீண்டும் ஆனந்தி செல்ல கூடாது என புது திட்டம் போடுகிறார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.