பேன்ட் ஷர்ட் போட்ட ஆனந்தி.. ரொமான்டிக்காக பேசும் மகேஷ்.. இன்றைய சிங்கப்பெண்ணே சீரியல்
ஆனந்தியை முதல்முறை பேன்ட் ஷர்ட்டில் கண்ட மகேஷ் அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்துடன் அவரிடம் ரொமான்டிக்காக பேசியுள்ளார்.

பேன்ட் ஷர்ட் போட்ட ஆனந்தி.. ரொமான்டிக்காக பேசும் மகேஷ்.. இன்றைய சிங்கப்பெண்ணே சீரியல்
காயத்ரியை கடத்தல் கும்பலிடம் இருந்து காப்பாற்ற முயன்ற ஆனந்தி ஹாஸ்டல் வார்டனிடம் மாட்டியுள்ளார். இதனால், அங்கிருந்து நடு ராத்திரியில் வெளியே அனுப்பப்பட்ட ஆனந்தியை மகேஷ் அன்பு வீட்டில் தங்க வைக்கிறார்.
ஆனந்தியை பாசமாக கவனிக்கும் அன்பு
அங்கு ஆனந்திக்கு பாசமாக தோசை சுட்டுக் கொடுத்து பார்த்துக் கொள்கிறார் அன்பு. மேலும், ஆனந்தியை அவரது ரூமிலேயே தங்க வைத்து தேவையானவற்றை கவனித்து கொண்டார்.
இதற்கிடையில் வெளியூர் சென்றிருந்த அன்புவின் அம்மாவும் தங்கையும் உடனே திரும்பிவர செய்வதறியாது முழிக்கிறார் அன்பு. இந்நிலையில் அம்மாவிற்கு தெரியாமல் ஆனந்தியை எப்படி வீட்டில் வைத்து சமாளிக்கப் போகிறோம் என அன்பு நினைக்கிறார்.