Singapenne Serial: கைக்கு எட்டிய லட்சம்; சிங்கமாக மாறிய ஆனந்தி; ஆட்டத்தை தொடங்கிய மகேஷ்- சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
Singapenne Serial: “இன்னொரு பக்கம் அழகப்பன் குடும்பத்திடம், உங்களை இந்த பணச் சிக்கலில் இருந்து நான் விடுவிக்க வேண்டும் என்றால், ஆனந்தியை எனக்கு கட்டி வையுங்கள் என்று கிடக்குப் பிடி போடுகிறான். இதைக் கேட்ட கோகிலா, அது நடக்கவே நடக்காது என்று கூறுகிறாள்.” - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

Singapenne Serial: அழகப்பன் தன்னுடைய நிலத்தை மீட்பதற்காக 10 லட்சம் வேண்டும் என்று ஆனந்தியிடம் கூறியிருந்தார். இதையடுத்து ஆனந்தி தனக்குத் தெரிந்த ஒவ்வொருவரிடமும் பணம் கேட்டு உதவிக்குச் சென்றாள். ஆனால் எந்த இடத்திலும் அவளுக்கு பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து அன்பும் ஆனந்தியும் வங்கி ஒன்றிற்கு பணம் கேட்பதற்காக சென்றிருந்தார்கள். அப்போது மகேஷ் போன் செய்து அங்கே லோன் வாங்குவதற்காக யாரேனும் வந்திருக்கிறார்களா என்று கேட்கிறான்.
சொக்க லிங்கம் வைத்த செக்
இன்னொரு பக்கம் அழகப்பன் குடும்பத்திடம், உங்களை இந்த பணச் சிக்கலில் இருந்து நான் விடுவிக்க வேண்டும் என்றால், ஆனந்தியை எனக்கு கட்டி வையுங்கள் என்று கிடக்குப் பிடி போடுகிறான். இதைக் கேட்ட கோகிலா, அது நடக்கவே நடக்காது என்று கூறுகிறாள்.
இதற்கிடையே, ஆனந்தி தெருவில் வந்து கொண்டிருந்த பொழுது அண்ணன் வேலுவின் நண்பர், ஒருவரை துரத்திக்கொண்டு ஓடி வருவதை ஆனந்தி பார்க்க நேரிடுகிறது. அவர் கையில் ஒரு பையை வைத்திருந்தான். இதைப் பார்த்த ஆனந்தி, அவனிடம் சண்டை செய்து, பையை வாங்கி விடுகிறாள். இதற்கிடையே பின்னால் வேலு வந்து நிற்கிறான். இத்தோடு இன்றைய புரோமோ முடிவடைந்தது.