‘சாக கிடந்தேன்.. அப்போ என் மார்பை பிடிச்சு சந்தோசப்பட்டாங்க’ நடிகை சந்தியா ஷாக் பேட்டி!
‘கிட்டத்தட்ட நான் பிணம் மாதிரி தான் இருந்தேன். பிணத்தை கூடவா இப்படி செய்வாங்க?’

சந்திரலேகா உள்ளிட்ட பிரபல சீரியல்களில் நடித்து வருபவரும், தெரு நாய்களை பாதுகாப்பதை பகுதி நேர பணியாக செய்து வரும் சந்தியா, பிரபல யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் அளித்த சுவாரஸ்யமான பதில்கள் இதோ:
‘‘எப்போதும் நாய்கள் நம்மை நோக்கி வந்தால், நாம் அதை விட டாமினேட் ஆனவன் என்பதைப் போல அதை எதிர்கொள்ள வேண்டும். இது எல்லா விலங்குகளுக்கும் பொருந்தும். எனவே நாயை பார்த்ததும், பயந்து ஓடினால் அது அதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொள்ளும்.
2006ல் கும்பகோணத்தில் செல்லமடி நீ எனக்கு டைட்டில் பாடல் எடுக்கும் போது, கோயில் யானை உடன் ஷூட் எடுத்தோம். அப்போது அது என்னை தாக்கியது. இதுவரை எனக்கு யானை மீது எந்த கோபமும் இல்லை. யானை தாக்கியதில், 7 இடங்களில் எனக்கு முறிவு ஏற்பட்டது. பாகங்களை அகற்ற நேர்ந்தது.
