அத்தனையும் பொய்.. ஆதாரமில்லாத வதந்தி.. பிக்பாஸ் வீட்டை வைத்து நடக்கும் பஞ்சாயத்து..
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் தீபக் மீது ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதாக நடிகர் சஞ்சீவ் கருத்து தெரிவித்துள்ளார்.

அத்தனையும் பொய்.. ஆதாரமில்லாத வதந்தி.. பிக்பாஸ் வீட்டை வைத்து நடக்கும் பஞ்சாயத்து..
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் மேனேஜர்- சர்வண்ட் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்கில் சமையல் செய்ய குறைவான ஆட்களை ஒதுக்க வேண்டாம் என்ற தொனியில் தீபக் அதை திறமை சம்பந்தமான வேலை எனக் கூறி இருந்தார்.
மேனேஜர்- லேபர் பிரச்சனை
வீட்டை பெருக்குவது, துடைப்பது போன்ற அடிப்படை வேலைகளை யார் வேண்டுமானாலும் செய்து விடலாம். ஆனால் சமையல் அப்படிப்பட்ட வேலை அல்ல. அதனால் அதற்கு ஆட்கள் தேவைப்படும் என்பதே தீபக்கின் கருத்து.
ஆனால், இதை தவறாக புரிந்துகொண்ட அருண். திறமையான வேலை என்பதை எந்த அர்த்தத்தில் கூறினீர்கள்? வேலை செய்யும் சாதாரண நபர் தானே என்ற தொனியில் தான் நீங்கள் இவற்றை எல்லாம் கூறி இருக்கிறீர்கள் என வாதம் செய்தார்.