Rekha: ஜெனிஃபர் டீச்சர்.. ஜெனிஃபர் டீச்சர்.. அப்ப சத்யராஜூக்கு நெஞ்சுல அவ்வளவு முடி..வாயை பிளந்த ரேகா!
Rekha: அப்போது சத்யராஜ் மிகவும் உயரமாக, வாட்ட சாட்டமாக இருப்பார். அவருக்கு அப்பொழுது நெஞ்சில் அவ்வளவு முடி இருக்கும். அதை பார்க்கும் பொழுது, என்ன இவருக்கு அங்கே இவ்வளவு முடியிருக்கிறது என்று ஆச்சரியமாக இருக்கும். -

கடலோரகவிதைகள் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகை ரேகாவும், சத்யராஜூம் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கின்றனர்.
நெஞ்சில் இவ்வளவு முடியா?
இது குறித்து ரேகா பேசும் போது, “ என்னுடைய முதல் திரைப்படமான கடலோரகவிதைகள் திரைப்படம், அடிப்படையாகவே மிகவும் ஸ்ட்ராங்காக அமைந்து விட்டது. காரணம் என்னவென்றால், அந்த படத்தில் இளையராஜா பாரதிராஜா, கண்ணன் போன்ற மிகப் பெரிய ஆளுமைகள் பணியாற்றியிருந்தனர். அப்போது சத்யராஜ் மிகவும் உயரமாக, வாட்ட சாட்டமாக இருப்பார். அவருக்கு அப்பொழுது நெஞ்சில் அவ்வளவு முடி இருக்கும். அதை பார்க்கும் பொழுது, என்ன இவருக்கு அங்கே இவ்வளவு முடியிருக்கிறது என்று ஆச்சரியமாக இருக்கும்.
நான் படப்பிடிப்பில் மிகவும் குறும்புத்தனமாகவே இருந்தேன். நான் அங்கும், இங்குமாக விளையாடிக் கொண்டே இருப்பேன். இதை பார்க்கும் சத்யராஜ், பாரதிராஜா சாரை கூப்பிட்டு, சார் நீங்கள் ஜெனிஃபர் டீச்சர் கதாபாத்திரத்தை எங்கேயோ வைத்திருக்கிறீர்கள். ஆனால் அந்தப் பெண்ணை பாருங்கள். அங்கு ஓடிப் பிடித்து, எதையோ சுட்டு சாப்பிட்டு கொண்டு இருக்கிறது என்று சொல்லிக் கொடுப்பார்.