GV Prakash Kumar: கேரளாவில் நடந்த உண்மை சம்பவம்! தமிழ் பற்றிய கதை - ரெபல் படம் குறித்து ஜிவி பிரகாஷ் பேச்சு
இயக்குநர் நிகேஷின் உறவினர் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் பின்னணி தான் ரெபல். தமிழ் பற்றி பேசும் கதையாக இந்த படம் உள்ளது என்று ஜி.வி. பிரகாஷ் குமார்.

ரெபல் படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார்
ஜிவி பிரகாஷ் குமார் - பிரேமலு படப் புகழ் மமிதா பைஜு நடிப்பில் உருவாகியிருக்கும் காதல், ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படம் ரெபல். படத்தை புதுமுக இயக்குநர் நிகேஷ் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. விழாவில் படத்தின் நாயகன் ஜி.வி. பிரகாஷ் குமார் கூறியதாவது: "தமிழ் பற்றி பேசும் கதையாக ரெபல் படம் உள்ளது. இந்த கதையில் நடிக்க என்னிடம் அணுகியது மகிழ்ச்சியாக இருந்தது. இயக்குநர் நிகேஷின் உறவினர் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.
படத்தில் கதாநாயகியாக வரும் மமிதா பைஜு சிறப்பாகவும், அழகாகவும் தனது கதாபாத்திரத்தை செய்துள்ளார்.