ராஷ்மிகாவின் காதலை விவரிக்கும் விஜய் தேவர்கொண்டா! தி கேர்ள் பிரண்ட் டீசர் வெளியானது!
புஷ்பா 2 படத்திற்கு பிறகு ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் "தி கேர்ள் பிரெண்ட்” என்ற படத்தில் நடித்துள்ளார். கதாநாயகியை மட்டும் மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கன்னட மொழியில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்த்னா, தெலுங்கில் இவர் நடித்த கீதா கோவிந்தம் படம் வாயிலாக பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். மேலும் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களால் நேஷனல் க்ரஸ் எனவும் அழைக்கப்படுகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் அல்லு அர்ஜூனுடன் இணைந்து நடித்த வெளியான புஷ்பா 2 மாபெரும் வெற்றி அடைந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. புஷ்பா 2 படத்திற்கு பிறகு ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் "tதி கேர்ள் பிரெண்ட்” என்ற படத்தில் நடித்துள்ளார். கதாநாயகியை மட்டும் மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை நடிகர் ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். தசரா புகழ் தீட்சித் ஷெட்டி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
விஜய் தேவர்கொண்டாவின் கவிதைக் குரலில்
புஷ்பா 2: தி ரூல் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ராஷ்மிகா மந்தனா இப்போது தனது அடுத்த பெரிய வெளியீடான தி கேர்ள் பிரெண்ட் ஒரு பான்-இந்தியன் படத்திற்கு தயாராகி வருகிறார். ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள இப்படத்தின் டீசரை இன்று விஜய் தேவரகொண்டா வெளியிட்டார். இதன் டீசர் வீடியோ யூட்யூப்பில் பல லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது.
தி கேர்ள் ப்ரண்ட் படத்தின் டீசர் இன்று காலை 11 மணி அளவில் வெளியானது. இந்த டீஸரில் விஜய் தேவரகொண்டாவின் கவிதைக் குரலில், பெண் கதாநாயகியான ராஷ்மிகாவின் அழகைப் புகழ்ந்து, ராஷ்மிகாவின் கல்லூரிக் காதல் வாழ்க்கையின் காட்சிகளுடன் திரையில் விரிகின்றன. சரியான கதைக்களம் மறைக்கப்பட்ட நிலையில், ராஷ்மிகாவின் கதாபாத்திரம் ஆண் கதாநாயகன் தீக்ஷித் ஷெட்டி உடனான அவரது சிக்கலான காதல் உறவுடன் போராடுகிறது என்பது தெளிவாகிறது. ஆத்மார்த்தமாக காதலிக்கப்படும் காதலி ஏமாற்றப்படுகிறாள் என்பது போல இந்த டீசர் அமைந்துள்ளது.
