Anand krishnamoorthi: ‘மணி சார் அப்பவே அப்படித்தான்;கமல் சாரின் மர்மயோகிதான்’-தேசிய விருது வென்ற ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி!
Anand krishnamoorthi: இது இப்போது அல்ல, அஞ்சலி திரைப்படத்தில் நான் நடிக்கும் பொழுதே, அவர் என்னை அப்படித்தான் ட்ரீட் செய்தார். நான் தற்போது சவுண்ட் டிசைனராக பல படங்களில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி!

70 வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் அதிக விருதுகளை தட்டிச்சென்று இருக்கிறது. குறிப்பாக, இந்தப்படத்தில் சவுண்ட் டிசைனராக பணியாற்றிய ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கு, சிறந்த சவுண்ட் டிசைனருக்கான விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவர் அடிப்படையில் ஒரு டெக்னிஷியனாக இருந்தாலும், அவர் குழந்தை நட்சத்திரமாக அஞ்சலி, சதிலீலாவதி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் என்பது திரைத்துறையில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். இவர் கடந்த வருடம் பிஹைண்ட் வுட்ஸ் சேனலுக்கு பேட்டிக்கொடுத்தார். அந்த பேட்டி இங்கே!
கமல்சாரின் மர்மயோகி
அந்த பேட்டியில் அவர் பேசும் போது, “என்னதான் எனக்கு மணிரத்னம் சாரை சின்ன வயதில் இருந்து தெரிந்தாலும், தொழில் என்று வந்துவிட்டால், அவர் மிகவும் கறாராகத்தான் இருப்பார். இது இப்போது அல்ல, அஞ்சலி திரைப்படத்தில் நான் நடிக்கும் பொழுதே, அவர் என்னை அப்படித்தான் ட்ரீட் செய்தார். நான் தற்போது சவுண்ட் டிசைனராக பல படங்களில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
கமல் சாரின் மர்மயோகி திரைப்படம்தான் நான் சவுண்ட் இன்ஜினியராக முதலில் பணியாற்ற வேண்டிய படமாக இருந்தது. ஆனால் அந்த படம் வெளியே வரவில்லை. அந்த படத்தை குறித்து என்னை எதுவும் கேட்காதீர்கள். என்னால் எதுவும் சொல்ல முடியாது. காரணம் என்னவென்றால் அந்த படம் கமல் சாரின் குழந்தை. அந்தப்படம் குறித்து ஒரே ஒரு விஷயத்தை மட்டும் என்னால் சொல்ல முடியும்.