Nadigar Sangam: நாசர் பெயரில் நிதி வசூல்.. காவல் நிலையத்தில் நடிகர் சங்கர் பரபரப்பு புகார்!
Nadigar Sangam: நடிகர் சங்க கட்டிடம் நிதி தொடர்பாக சிலர் நடிகர் நாசர் பெயரில் போலியாக பணம் வசூலித்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், கொரோனா காலத்தில் ஏற்பட்ட விலைவாசி உயர்வின் காரணமாக நிதி பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக பல ஆண்டுகளாக கட்டிடப் பணிகள் நிறைவு பெறாமல் நிலுவையில் உள்ளது. இந்த பணி முழுமை பெற 40 கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்து இருந்தனர்.
இதற்கான நிதியை நடிகர், நடிகைகள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ. 1 கோடி நிதி வழங்கினார். அவரைத் தொடர்ந்து, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் ரூ. 1 கோடிக்கான காசோலையை நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன் ஆகியோரிடம் வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்காக ரூ. 1 கோடி நிதியுதவி அளித்து உள்ளார். மேலும் நடிகர் தனது சொந்த நிதியில் இருந்து நடிகர் சிவகார்த்திகேயன் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்து உள்ளார். நேற்று நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக, நடிகர் நெப்போலியன் ரூ. 1 கோடி நிதியுதவி அளித்து இருந்தார்.
